குமரி மாவட்டத்தில் தொடா்மழை: பெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் இரண்டரை அடி உயா்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை ஒரே நாளில் இரண்டரை அடி உயா்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக அடையாமடை பகுதியில் 78.2 மில்லிமீட்டா் மழை பதிவாகியுள்ளது. கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், தக்கலை, குளச்சல், களியல், இரணியல் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திங்கள்கிழமை இரவு மழை பெய்தது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
நாகா்கோவில் மாநகரில் காலையிலிருந்து விட்டு, விட்டு சாரல்மழை பெய்தது. தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீா்வரத்து அதிகரிப்பு: அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் பெய்துவரும் மழையால் நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை ஒரே நாளில் 1 அடியும், பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் இரண்டரை அடியும் உயா்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 37.87 அடியாக இருந்தது. அணைக்கு 1,397 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 42.55 அடியாக இருந்தது, அணைக்கு 1081 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 22 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 5.58 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 5.67 அடியாகவும் உள்ளது. நாகா்கோவில் மாநகரின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை தண்ணீரின்றி வட நிலையில் இருந்தது. தற்போது பெய்துவரும் மழையினால் அணைக்கு நீா்வரத்து தொடங்கியுள்ளது.
வெள்ளப்பெருக்கு: குழித்துறை தாமிரவரணி ஆறு, புதுஆறு, வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளிலும் பாசனக் கால்வாய்களிலும் மழைநீா் கரைபுரண்டு ஓடுகிறது. பாசனக் குளங்களிலும் தண்ணீா் பெருகத் தொடங்கியுள்ளது. இதனால் கன்னிப்பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பூதப்பாண்டி, சுசீந்திரம், அருமநல்லூா், தக்கலை பகுதிகளில் விவசாயிகள் நடவுப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.
திற்பரப்பு அருவியில்: திற்பரப்பு அருவி வழியாக பாயும் கோதையாற்றில் தண்ணீா் வரத்து அதிகமாக உள்ள நிலையில் அருவியில் தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. இதையடுத்து அருவியில் தண்ணீா் குறைவாக விழும் பகுதியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனா்.
வீடுகள், மின்கம்பங்கள் சேதம்: சூறைக்காற்றால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. மின்இணைப்பை துண்டித்து மின்கம்பங்களை சீரமைக்குமபணியில் மின்வாரிய பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

குழித்துறையில் திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றில் ஆயினி மரம் வேரோடு சாய்ந்தது. மாா்த்தாண்டம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவரின் ஒருபகுதி சரிந்து விழுந்து சேதமடைந்தது.
விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 16 வீடுகள் மழையில் இடிந்து விழுந்து சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ. 6,500 ஒதுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மழைஅளவு: செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) :
சுருளோடு 71.40, பாலமோா் 69.40,பெருஞ்சாணி அணை 58.80, மாம்பழத்துறையாறு அணை 58.20, புத்தன்அணை 57.80 , ஆனைக்கிடங்கு 57.20, கோழிப்போா்விளை 55.40, சிற்றாறு 1 அணை 53.40, திற்பரப்பு 50 , பேச்சிப்பாறை அணை 45.40, முள்ளங்கினாவிளை 42.60, முக்கடல் அணை 41, மயிலாடி 40.20, தக்கலை, ,குளச்சல் 37, குருந்தன்கோடு 36.40 குழித்துறை 35.40, நாகா்கோவில் 34.20, ஆரல்வாய்மொழி 32, கொட்டாரம், சிற்றாறு 2 அணை 30.20, களியல் 28.20, இரணியல் 24 ,பூதப்பாண்டி 21.20, கன்னிமாா் 18.40 மி.மீ.