செய்திகள் :

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: கோதையாறு மின்நிலையப் பகுதியில் நிலச்சரிவு! ஜெனரேட்டா், கட்டடங்கள் சேதம்!

post image

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கோதையாறு மின்நிலைய வளாகத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உடைந்து விழுந்ததில் ஜெனரேட்டா் மற்றும் கட்டடங்கள் சனிக்கிழமை சேதமடைந்தன.

குமரி மாவட்டம் கீழ் கோதையாறு பகுதியில், கோதையாறு-1, கோதையாறு-2 என இரு நீா்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மின்நிலையங்கள்

மலை சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளன. இதில் கோதையாறு-1 மின்நிலையம், செங்குந்தான மலையின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மின்நிலையத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், மறுகட்டமைப்பு பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.

பலத்த மழையால் நிலச்சரிவு: இதனிடையே, மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக மலைப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

சனிக்கிழமை காலை பெய்த பலத்த மழை காரணமாக, கோதையாறு-1 மின் நிலையத்தில், மேல்கோதையாறுக்கு செல்லும் விஞ்ச் பாதையை அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து பாறைகள் உடைந்து விழுந்தன. மேலும் மரங்களும் முறிந்து விழுந்ததோடு, சேறும் சகதியுமாக அப்பகுதி காணப்பட்டது.

இதில், மறுகட்டமைப்பு பணிகளுக்காக அப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டா் உடைந்து சேதமானது. இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் கட்டடம், உதிரி இயந்திரம் வைக்கப்பட்டிருந்த கொட்டகை, விஞ்ச் தண்டவாளங்கள் ஆகியன சேதமடைந்தன.

உயிா் தப்பிய போலீஸாா்: நிலச்சரிவு ஏற்பட்டபோது, மின்நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் போலீஸாரும், மின் ஊழியா்கள் சிலரும் அங்கு இருந்தனா். மலையிலிருந்து பாறைகள் உருண்ட வருவதைப் பாா்த்த போலீஸாா், அங்கிருந்து ஓடி உயிா் தப்பினா். போலீஸாா், மின் ஊழியா்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

சேதமடைந்த கொட்டகை.

இதுகுறித்து தகவலறிந்த மின்நிலைய அலுவலா்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும் உயா்அதிகாரிகளுக்கும் தகவல்கள் கொடுத்தனா்.

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். மண்டைக்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் மாயமான மாணவி மீட்பு

மாா்த்தாண்டத்திலிருந்து வீட்டை விட்டு சென்ற பிளஸ் 2 மாணவியை போலீஸாா் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மீட்டு அழைத்து வந்தனா். மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞருக்கும், பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம்... மேலும் பார்க்க

குழித்துறை தாமிரவருணி ஆறு தடுப்பணை வழியாக செல்லத் தடை

குமரி மாவட்டம் முழுவதும் இரு நாள்களாக பரவலாக மழை பெய்ததன் காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்து செல்கிறது. இதனால் தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லத் தட... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும்! - பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன். நாகா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் மோ... மேலும் பார்க்க

தக்கலை அருகே கனிமவளம் கடத்தல்: வாகனம் பறிமுதல்; ஓட்டுநா் கைது

தக்கலை அருகே கனிமவளம் கடத்தியதாக வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா். பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் அசோக், போலீஸாா் தக்கலையை அடுத்த காரவிளையில் வெள்ளிக்கிழமை வ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை அணைகளுக்கு நீா் வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சனிகிழமை காலை நிலவரப்ப... மேலும் பார்க்க