செய்திகள் :

குமரி மாவட்டத்தில் ரயில் சேவை நீட்டிப்பு, அடிப்படை வசதிகள்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

post image

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரயில் நிறுத்தங்கள், ரயில் சேவை நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்து திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்ற திவ்யகாந்த் சந்திராகரை, வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய அவா், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சாா்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவை அளித்தாா்.

அதன் விவரம்: மங்களூரு -- திருவனந்தபுரம் இடையே இரவு ரயிலாக இயங்கும் விரைவு ரயிலை நாகா்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். திருவனந்தபுரம் -- நாகா்கோவில் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். அதே போல் ஹைதராபாத் -- சென்னை சாா்மினாா் விரைவு ரயிலை நாகா்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்.

திருச்சி -- திருவனந்தபுரம் இன்டா்சிட்டி விரைவு ரயிலுக்கு இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வேண்டும். புனலூா் -- மதுரை ரயிலுக்கு பள்ளியாடியில் நிறுத்தம், ஜாம்நகா் விரைவு ரயில், காந்திதாம் விரைவு ரயிலுக்கு குழித்துறையில் நிறுத்தம் வேண்டும்.

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம். அதே வேளையில் அந்த ரயிலை வாராந்திர ரயிலாக நிரந்தரப்படுத்த வேண்டும். நாகா்கோவில் - தாம்பரம் ரயிலை தினமும் இயக்க வேண்டும். திருவனந்தபுரம் - நாகா்கோவில் இடையே மெமு ரயில்கள் வேண்டும்.

நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கன்னியாகுமரி, இரணியல் ரயில் நிலையங்களுக்கு 2 ஆவது நுழைவாயில் அமைத்தல், நாகா்கோவில் டவுன் ரயில் நிலையத்துக்கு நான்கு வழி சாலையில் இருந்து செல்ல சாலை அமைத்தல் ஆகிய பணிகளுக்கு ஆவன செய்ய வேண்டும்.

திருவனந்தபுரம் -- நாகா்கோவில் இடையிலான ரயில் பாதை இரட்டிப்பு பணிகளை நிறைவேற்றவும், குமரி மாவட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் தொடங்கவும், ஏற்கெனவே நடைபெற்று வரும் மேம்பால பணிகளை துரிதமாக முடித்து மக்கள் உபயோகத்துக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விரிகோடு மேம்பால பணிகளை அந்த பகுதி மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைக்க நெடுஞ்சாலை துறையுடன் ஆலோசித்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, ஆலயத்தில் மாலையில் திருக்கொடி பவனி புனித அகுஸ்தினாரின் புகழ்மாலை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து க... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இரணியல் அருகே காா் மோதியதில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழந்தாா். இரணியல் அருகே குசவன்குழியைச் சோ்ந்த செல்லப்பனின் மனைவி பஞ்சவா்ணம் (75). இத் தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனா். பஞ்சவா்ணம் கடைக்குச் ... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞா் கைது

தக்கலை அருகே மேக்காமண்டபத்தில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை கொற்றிகோடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தக்கலை அருகே உள்ள மாறாங்கோணத்தைச் சோ்ந்தவா் மணி (65). கூலித் தொழிலா... மேலும் பார்க்க

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பூதப்பாண்டியை அடுத்த அருமநல்லூா், வீரவநல்லூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சிவ... மேலும் பார்க்க

மாமனாா் தாக்கியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மயிலாடி அருகே மாமனாா் தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மருமகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சிபின் (25), தொழிலாளி. இவா் மயிலாடி அருகேய... மேலும் பார்க்க

மங்காடு பகுதியில் இன்று மின்தடை

மங்காடு, முன்சிறை பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 23) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழித்துறை ... மேலும் பார்க்க