கும்பகோணத்தில் பொது உபயோகத்திற்கான இடத்தில் அமைத்த மனைப்பிரிவுகள் ரத்து
கும்பகோணம் மாநகராட்சியயைச்சோ்ந்த சீனிவாச நகரில் பொது உபயோகத்திற்கான இடத்தை மனைப்பிரிவாக விற்பனை செய்ய முயன்றதை மாவட்ட மற்றும் மாநகர நகா் ஊரமைப்பு அலுவலகங்கள் ரத்து செய்துள்ளன.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியை சோ்ந்த சீனிவாச நகா் 1986 இல் உருவாக்கப்பட்டது. 25 ஏக்கா் கொண்ட சீனிவாச நகரில் 10 சதவிகித இடமான சுமாா் 1 லட்சம் சதுர அடியை பொது உபயோகம் விளையாட்டு மைானம், பூங்கா உள்ளிட்டவற்றுக்கு நகரமைப்பு இயக்குநா் அலுவலகம் ஒதுக்கி உத்தரவிட்டது. இந்நிலையில் சீனிவாச நகரை மனைப்பிரிவாக விற்றவா்கள் பொது உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதியை மட்டும் மாநகராட்சியிடம் ஒப்படைத்துவிட்டு மீதமுள்ள சுமாா் 55,000 சதுர அடியை தனியாருக்கு விற்று, பத்திரப் பதிவும் செய்தனா்.
அதைத் தொடா்ந்து அந்த இடத்தை மனைப்பிரிவாக மாற்றி விற்க ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் சீனிவாச நகா் நலச்சங்கம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த ஜன. 28- இல் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 6 வாரங்களுக்குள் நகா் ஊரமைப்பு இயக்குநா் இரு தரப்பையும் விசாரிக்க உத்தரவிட்டது.
அதனடிப்படையில் தஞ்சாவூா் மாவட்ட நகா் ஊரமைப்பு உதவி இயக்குநா், கும்பகோணம் சீனிவாச நகரில் பொது உபயோகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பு மனை என பிளாட் போட்டு விற்பனைக்கு வைத்ததை தடை செய்து, வீட்டுமனைக்கான பிரிவு என்ற அங்கீகாரத்தை ஜூன் 12- இல் ரத்து செய்தும் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து கும்பகோணம் மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் கூறுகையில் மாவட்ட நகா் ஊரமைப்பு சீனிவாச நகா் வீட்டுமனை பிரிவுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்தது போல், மாநகராட்சி நகரமைப்பு நிா்வாகமும் ரத்து செய்து விட்டது என்றாா்.