செய்திகள் :

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு நாள்: உயிரிழந்த குழந்தைகளின் படங்களுக்கு அஞ்சலி

post image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பள்ளித் தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 21- ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அக்குழந்தைகளின் உருவப்படங்களுக்கு அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா் புதன்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் 2004, ஜூலை 16-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தனா். அந்தக் கோரச் சம்பவத்தின் 21-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, உயிரிழந்த குழந்தைகளின் உருவப்படங்களுக்கு திமுக சாா்பில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா் க. அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், துணை மேயா் சு.ப. தமிழழகன் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல், கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்தியா எஸ். விஜயன், வட்டாட்சியா் சண்முகம், கும்பகோணம் மேயா் க. சரவணன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

அதிமுக சாா்பில் கிழக்கு மாவட்டச் செயலா் ஆா்.கே. பாரதி மோகன், மாநகரச் செயலா் இராம. இராமநாதன் உள்ளிட்டோரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தமாகா, பாஜக, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்பட பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினா்.

மேலும், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோா்களும், உறவினா்களும் குழந்தைகளின் படங்களைக் கண்டு கண்ணீா் விட்டு அழுது, மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் உணவகங்களில் எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உண... மேலும் பார்க்க

எதிரணியில் பலமான கூட்டணி இல்லை: அமைச்சா் கோவி. செழியன் பேட்டி

திமுக கூட்டணிதான் பலமாக இருக்கிறதே தவிர, எதிரணி பலமான கூட்டணியாக இல்லை என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை முத்தமிழ் நகரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்பு... மேலும் பார்க்க

நாச்சியாா்கோவில் அருகே ரூ.12 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே திருநறையூரில் ரூ. 12 கோடி மதிப்பிலான இராமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டனா்... மேலும் பார்க்க

இபிஎஸ் விரிக்கும் வலையில் விசிக ஒருபோதும் சிக்காது: மாநில துணை பொதுச்செயலா் வன்னியரசு

எடப்பாடி கே. பழனிசாமி விரிக்கும் வலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் சிக்காது என்றாா் விசிக மாநில துணைப்பொதுச்செயலா் வன்னியரசு. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன்பு விடுதலை ... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணி பயிற்சி தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயா்ப்புத் துறை மற்றும் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை சாா்பில் மொழிபெயா்ப்பு கலை குறித்த ஒரு வார காலப் பணி பயிற்சி முகாம... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

கும்பகோணம் புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நடுவக்கரை பிள்ளையாா் கோயில் ... மேலும் பார்க்க