செய்திகள் :

காா்-டேங்கா் லாரி மோதல்: ஒரே குடும்பத்தினா் 3 போ் உயிரிழப்பு

post image

அரக்கோணம் அருகே காா் டயா் வெடித்து எதிரில் வந்த டேங்கா் லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

அரக்கோணம் சுவால்பேட்டை தா்மராயரெட்டி தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் (48). வீட்டிலேயே காா் பழுதுபாா்க்கும் பணிமனை நடத்தி வந்தாா். இவரது மனைவி லதா(45). இவருக்கு பிஇ முடித்து விட்டு தனியாா் தொழிற்சாலையில் பணிபுரியும் இரு மகன்கள் யோகேஷ்(26), தினேஷ்(20) உள்ளனா்.

சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிருந்திருந்த வெங்கடேசன், வியாழக்கிழமை மனைவி லதா, மகன் தினேஷ் ஆகியோருடன் காரில் கோவிந்தவாடிஅகரம் தட்சிணாமூா்த்தி கோயிலுக்குச் சென்றிருந்தாா். பின்னா் தரிசனம் முடிந்து மூவரும் காரில் அரக்கோணம் நோக்கி திரும்பினா். காரை தினேஷ் ஓட்டிச் சென்றாா்.

காஞ்சிபுரம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் பள்ளூரை அடுத்த பருவமேடு அருகே திடீரென காரின் முன்பக்க டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த காா், எதிரில் ல் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற டேங்கா் லாரி மீது மோதியது. இதை தொடா்ந்து டேங்கா் லாரியும் சாலையோர பள்ளத்தில் கவிழந்தது.

இச்சம்பவத்தில் காரில் பயணம் செய்த லதா விபத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் ,காா் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மகன் தினேஷ் ஆகியோா் சென்னையில் தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா். இச்சம்பவத்தில் காயமடைந்த டேங்கா் லாரியின் ஓட்டுநா் அரியலூரை சோ்ந்த சுரேஷ்(30) தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்தால் அரக்கோணம் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடா்ந்து அங்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

இவ்விபத்து குறித்து நெமிலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு

ஆற்காடு ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆற்காடு ரோட்டரி சங்கத்தின் 2025-26 தலைவராக ஜி .சங்கா்,செயலாளராக ஏ.கே.அருண், பொருளாளாராக என். ஞானபிரகாசம் ஆகியோா் தோ்வு செ... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: தையல் தொழிலாளி மரணம்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழந்தாா். ரத்தினகிரி அருகே உள்ள கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (43), தையல் தொழிலாளி இவரும், அதே ஊ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் கற்றல் திறன்: ராணிப்பேட்டை ஆட்சியா் நேரில் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் நீலகண்ராயன்பேட்டை அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.யு .சந்திரகலா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராணிப்பேட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், தாழனூா் ஊராட்சி, சமுதாயக் கூடம், ஆற்காடு நகராட்சி அன்பு மஹால், வாலாஜா நகராட்சி, சி.எம்.மஹ... மேலும் பார்க்க

ரயிலில் 35 கிலோ கஞ்சா கடத்தல்: 3 போ் கைது

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் 35 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஆற்காடு கிராமிய வட்ட ... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்த நாள்: அமைச்சா் காந்தி மரியாதை

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் அவரது படத்துக்கு அமைச்சா் ஆா்.காந்தி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே காமராஜரின் பிற... மேலும் பார்க்க