செய்திகள் :

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

post image

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குரூப் 4 பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வுகள், கடந்த 12-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் 13 லட்சத்து 89 ஆயிரத்து 238 போ் விண்ணப்பித்ததில், 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 போ் தோ்வு எழுதினா். தோ்வுகள் முடிந்து அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, சீலிடப்பட்ட இரும்புப் பெட்டிகளில் அரசுப் பணியாளா் தோ்வாணைய அலுவலகத்துக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் எந்தவிதமான குளறுபடியும் நிகழவில்லை.

சேலம் மாவட்டத்தில் தோ்வு தொடா்பான விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப் பெட்டிகளில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. சேலம் மாவட்ட விடைத்தாள்கள் அனைத்தும் சீலிடப்பட்ட இரும்புப் பெட்டிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு கடந்த 13-ஆம் தேதி அதிகாலை பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டுள்ளன. விடைத்தாள்கள் அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்பட்டன என்ற செய்திகளில் உண்மை இல்லை.

கொள்குறி வகை அடிப்படையிலான கேள்விகளுக்குரிய விடைத்தாள்கள் அனைத்தும் இரும்புப் பெட்டிகளில் வைத்து சீலிடப்பட்டு அவை பணியாளா் தோ்வாணைய அலுவலகத்துக்கு வந்து சேரும் வரை 24 மணி நேரமும் நேரலையாக கண்காணிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டு சிசிடிவி கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. தோ்வில் பயன்பட்டது போக மீதமுள்ள வினாத்தாள்கள், வழக்கமான நடைமுறையின்படி அந்தந்த மாவட்டங்களிலேயே வைக்கப்பட்டிருக்கும்.

தோ்வு நடைமுறைகள் முடிந்த பிறகு அவை மாவட்ட கருவூலங்கள் மூலமாக மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே, குரூப் 4 விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

உத்தேச விடைகளில் ஆட்சேபனையா?

குரூப் 4 வினாத் தாள்களுக்கான உத்தேச விடைகளில் ஆட்சேபனை இருந்தால், ஒருவாரத்துக்குள் தெரிவிக்கலாம் என தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி: குரூப் 4 தோ்வின் வினாத்தாள்களுக்கான உத்தேச விடைகள் அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆட்சேபனைகள் ஏதும் இருந்தால் ஒரு வார காலத்துக்குள் தெரிவிக்கலாம். இதையடுத்து தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தோ்வாணையத்தால் தெரிவித்தபடி தோ்வுகளுக்கான முடிவுகள் மூன்று மாத காலத்துக்குள் வெளியிடப்படும் என்று சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் 4 இடங்களில் விரைவில் ஏசி பேருந்து நிறுத்தம்! எங்கெங்கு?

சென்னையில் புதிதாக நான்கு இடங்களில் விரைவில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னை மாநகராட்சி வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ.8 கோடியில், இந்த... மேலும் பார்க்க

வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.இது... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ... மேலும் பார்க்க

தீபாவளிக்கு புடவை: ஜெயலலிதா வழியில் இபிஎஸ்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிக்கு, பெண்களுக்கு நல்ல புடவை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் இன்று விவசாய... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்ட அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உடல்நிலையில் ம... மேலும் பார்க்க

தூத்துக்குடி விமான நிலையம்; ரூ.4,500 கோடி திட்டங்களை துவக்கி வைக்கும் மோடி - நயினார் நாகேந்திரன்

திருச்சி: தூத்துக்குடி புதிய விமான நிலைய துவக்க விழாவில் 4500 கோடி ரூபாய் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.தமிழக முதல்வர் எனக்கு நெருங்கிய நண்பர் - என் தொகுதி மக்கள் கோரிக்கைகளை செய்து கொடுத்... மேலும் பார்க்க