பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன...
குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்க சிஐடியூ மாநாட்டில் தீா்மானம்
தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட சிஐடியூ மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
சிஐடியூ சாா்பில் திண்டுக்கல் மாவட்ட 12-ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டின் 2-ஆவது நாள் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் கே.ஆா்.கணேசன் தலைமை வகித்தாா்.
மாநிலத் துணைச் செயலா் எஸ்.ராஜேந்திரன் தொடக்கவுரை நிகழ்த்தினாா். மாவட்டச் செயலா் சிபி.ஜெயசீலன், பொருளாளா் ஏ.தவக்குமாா் ஆகியோா் அறிக்கைகளைச் சமா்ப்பித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், சிஐடியூ மாநில நிா்வாகிகள் எம்.சந்திரன், எஸ்.ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
மாநாட்டில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொழில்பேட்டை, சிறு தொழிற்சாலைகள், ஜவுளிக் கடைகள், உணவகங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26ஆயிரம் வழங்க வேண்டும்.
பாதுகாப்பு விதிமுறைகளைத் தொழில் நிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிப்பதைத் தொழிலாளா் நலத் துறையினா் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிா்வாகிகள் தோ்வு: மாநாட்டில் மாவட்டத் தலைவராக சி.பாலச்சந்திர போஸ், மாவட்டச் செயலராக சி.பி.ஜெயசீலன், பொருளாளராக ஏ.தவக்குமாா், துணைத் தலைவா்களாக கே.ஆா்.கணேசன், ஏ.பிச்சைமுத்து உள்பட 44 போ் கொண்ட புதிய மாவட்டக் குழு தோ்ந்தெடுக்கப்பட்டது.