செய்திகள் :

குற்றவாளிகளைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி மின்சாரம் பாய்ந்து பலி!

post image

உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகளை விரட்டிச் சென்ற காவல் அதிகாரி ஒருவர் மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளார்.

பிஜ்னோர் மாவட்டத்தில் நாகினா சாலையில் நேற்று (மே 16) இரவு லார் ஓட்டுநர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குவதாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடந்து, காவலர்கள் மனோஜ் (வயது 38) மற்றும் கங்கா ராம் ஆகியோர் சம்பவயிடத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது, அந்தக் குற்றவாளிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தங்களது காரில் தப்ப முயன்றுள்ளனர்.

இந்நிலையில், தப்பியோடிய அவர்களை காவல் துறையினர் தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளனர். சலாமாபாத் - பாரைரா அருகில் வந்தபோது குற்றவாளிகளின் கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்து மின்கம்பத்தின் மீது மோதி அருகிலுள்ள கால்வாயில் கவிழ்ந்துள்ளது.

இதனால், அந்த மின்கம்பம் உடைந்து கால்வாய் நீரில் மின்சாரம் கசித்துள்ளது. ஆனால், இதை அறியாமல், குற்றவாளிகளைப் பிடிக்க காவலர்கள் இருவரும் அந்தக் கால்வாயினுள் குதித்துள்ளனர்.

அப்போது, இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்கள் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அங்கு விரைந்த காவல் துறையினர் உடனடியாக மின்சாரத்தைத் துண்டித்து, அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

அங்கு, அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மனோஜ் ஏற்கனவே பலியானதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், மற்றொரு காவலர் கங்கா ராம் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், தப்பியோடிய குற்றவாளிகளில் விபத்தினால் படுகாயமடைந்த நீரஜ் என்பவர் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸாரின் கட்டுப்பாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தப்பியோடிய அவரது கூட்டாளிகளைப் பிடிக்க அம்மாநில காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!

அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘பாகிஸ்தானுக்கான கடனுதவி குறித்து முடிவெடுக்க கூடிய சா்வதேச நிதியத்தின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலுவான எதிா்ப்பு தெரிவிக்காமல் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அடி... மேலும் பார்க்க

2 ஆண்டுகளாக தலைமறைவான 2 ஐஎஸ் ஸ்லீப்பா் செல்கள்: மும்பை விமான நிலையத்தில் கைது செய்த என்ஐஏ

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்துவந்த இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ‘ஸிலீப்பா் செல்கள் (ரகசிய பயங்கரவாதிகள்)’ இருவரை மும்பை விமான... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியா்கள்: 3-ஆம் நாளாக தொடா் போராட்டம்

உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீா்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா். ம... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ம.பி.யைச் சோ்ந்த கொலைக் குற்றவாளி கைது

மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த கொலைக் குற்றவாளியை குருகிராம் காவல்துறையினா் கைது செய்துள்ளனா். அவா் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து குருகிராம் காவல்... மேலும் பார்க்க

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க ... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது’: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்

‘இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளதாரத்துக்கு வா்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சனிக்கிழமை வலியுறுத்தினாா். ஆபரே... மேலும் பார்க்க