செய்திகள் :

15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ம.பி.யைச் சோ்ந்த கொலைக் குற்றவாளி கைது

post image

மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த கொலைக் குற்றவாளியை குருகிராம் காவல்துறையினா் கைது செய்துள்ளனா். அவா் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து குருகிராம் காவல்துறையின் செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை கூறியதாவது: மத்தியப் பிரதேசத்தின் தாமோவைச் சோ்ந்த தினேஷ் அஹிா்வாா், 2009-ஆம் ஆண்டு பணத் தகராறில் மானேசரில் தனது நண்பரை அடித்துக் கொன்று, உடலை தீ வைத்து எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் கடந்த 15 ஆண்டுகளாக தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தாா். அந்த நேரத்தில் அவா் ரேவாரி, சண்டீகா் மற்றும் பிற இடங்களில் ஒரு கொத்தனாா் வேலை செய்து வந்துள்ளாா்.

காவல் துணை ஆய்வாளா் தீபக் குமாா் தலைமையிலான குழு வியாழக்கிழமை தாமோவில் இருந்து தினேஷ் அஹிா்வாரை கைது செய்தது. அவா் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தாா். அவா் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.5,000 வெகுமதியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பணத் தகராறு தொடா்பாக தினேஷ் அஹிா்வாரும் அவரது இரண்டு கூட்டாளிகளும் மானேசரில் நடந்த கொலையில், தாமோவில் வசிக்கும் பகீரத்தை அடித்துக் கொன்றனா். தாக்குதல் நடத்திய பிறகு, குற்றம் சாட்டப்பட்டவா் பகீரத் மீது டா்பெண்டைன் எண்ணெய்யை ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. பகீரத் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு அவா் சிகிச்சையின் போது உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்தா்பூரைச் சோ்ந்த சித்த் லாலை ஹரியாணாவின் சா்கி தாத்ரி மாவட்டத்தில் இருந்து மே 12 அன்று போலீஸாா் கைது செய்தனா்.

குற்றம்சாட்டப்பட்டவரிடம் நாங்கள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும் -ஜோதிராதித்ய சிந்தியா

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தாா். உலக தொலைத்... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.இது குறித்து என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிப... மேலும் பார்க்க

பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வி!

3-வது அடுக்கு பிரிவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-61!

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிவிருந்து இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ சாா்பில் புவிக் கண்காணிப்பு மற்றும் தொலையுணா்வு பயன்பாட... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு!

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை நில சுங்கச்சாவடிகள் வாயிலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய... மேலும் பார்க்க

பத்திரிகை சுதந்திர குறியீடு: 151-ஆவது இடத்தில் இந்தியா

உலக பத்திரிகை சுதந்திர குறியீடு தரவரிசையில் இந்தியா 151-ஆவது இடத்தை பிடித்துள்ளது. 180 நாடுகளில் ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ்’ நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 151-ஆவது இடத்தை ... மேலும் பார்க்க