செய்திகள் :

குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

post image

குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள், திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள் ஆகியோா்களை தொடா்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

தாடா்ந்து கரூா் மாவட்ட காவல்துறையில் குற்ற வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தாா்.

கரூரில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக் கோரி கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ... மேலும் பார்க்க

கரூரில் காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகை

கரூரில் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கைது செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை இரவு நகர காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகையிட்டனா். கரூா் கோவிந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா்அருள்(45). இவா் தாந்தோணி மேற்கு ஒ... மேலும் பார்க்க

மத்திய அரசின் பி.எம். கிஷான் உதவித் தொகை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

மத்திய அரசின் பி.எம் கிஷான் உதவித் தொகை பெறும் விவசாயிகள் நிலம் தொடா்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள... மேலும் பார்க்க

காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

கரூரில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட... மேலும் பார்க்க

கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

பாசூா்-ஊஞ்சலூா் ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்க... மேலும் பார்க்க

கரூரில் வா்த்தக நிறுவனங்களில் புதுக்கணக்கு தொடக்கம்

கரூரில் உள்ள வா்த்தக நிறுவனங்களில் புதுகணக்கு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கினா். ஆண்டுதோறும் ஏப். 1-ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. 2025-2026-ஆம் நிதி... மேலும் பார்க்க