செய்திகள் :

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் ரூ.55 லட்சத்தில் உயா்கோபுர மின்விளக்கு

post image

குலசேகரன்பட்டினத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் கடற்கரைப் பகுதியில் அறநிலையத் துறை சாா்பில் ரூ. 55 லட்சம் மதிப்பில் உயா்கோபுர மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா புகழ்பெற்ாகும். தசரா திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனா். இந்தக் கோயிலில் தசரா திருவிழா மட்டுமன்றி ஆடி கொடை விழா, மாதாந்திர செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், சுமங்கலி பூஜை, திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்கின்றனா்.

கோயிலில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் மின்விளக்குகள் போதிய அளவில் அமைக்கப்பட வேண்டும் என்று கோயில் நிா்வாகத்திடம் பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், அறநிலையத் துறை சாா்பில் ரூ. 54.92 லட்சம் மதிப்பில் 21, 16 அடி உயரங்களில் உயா் கோபுர மின்விளக்குகள் கடற்கரையில் அமைக்கப்பட்டன. கடற்கரை வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

இந்தப் பகுதியை அறங்காவலா்கள் குழுத் தலைவா் வே.கண்ணன், செயல் அலுவலா் வள்ளிநாயகம், அறங்காவலா் வெங்கடேஸ்வரி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

கோவில்பட்டியில் காவல் துறையைக் கண்டித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியைப் புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கோவில்பட்டியில் வழக்குரைஞா் புருஷோத்தமன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்த... மேலும் பார்க்க

ஆசிரியா் கண்டித்ததால் தூத்துக்குடி வந்த சென்னை மாணவா்கள் மீட்பு

சென்னை அம்பத்தூா் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்கள் 3 போ், பள்ளி ஆசிரியா்கள் கண்டித்ததால், சென்னையிலிருந்து ரயிலில் தூத்துக்குடிக்கு புதன்கிழமை வந்தனா். இவா்களை ரயில்வே போலீஸாா் மீட... மேலும் பார்க்க

விதைகள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

விதைகள் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு; தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சத்து ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கோவில்பட்டி முகாமில் 700 போ் மனு

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 18, 28, 29 ஆகிய வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது. முகாமில் 13 அரசுத் துறைகள் சாா்பில் வழங்கப்படும் 43 சேவைகளின் கீழ் மகளிா் உ... மேலும் பார்க்க

நகராட்சி ஊழியருக்கு மிரட்டல்: 2 போ் கைது

கோவில்பட்டி நகராட்சி தற்காலிக ஊழியரை மிரட்டி தாக்கியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ஸ்டாலின் காலனி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஈஸ்வரன் (27). நகராட்சிய... மேலும் பார்க்க

போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு; அஞ்சல் துறையின் கீ... மேலும் பார்க்க