செய்திகள் :

குழந்தையை கொன்ற கொடூர மாமன்; ஜாமீன் பெற உதவிய வழக்கறிஞர் குடும்பத்தில் சோகம்.. என்ன நடந்தது?

post image

பரமக்குடி எமனேசுவரம் பகுதியை சேர்ந்தவர் தேசிங்குராஜா. மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றின் வரும் இவரது மனைவியின் பெயர் டெய்சி. இவர்களுக்கு இரண்டரை வயதில் லெமோரியா என்ற குழந்தை உள்ளது.

நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் குழந்தை லெமோரியா தனது மாமாவான சஞ்சய் என்பவருடன் தனது வீட்டருகே விளையாடி கொண்டு இருந்துள்ளது.

குழந்தை லெமோரியா

அப்போது திடீரென சஞ்சய், அந்த குழந்தையை தனது வீட்டின் பின்புறம் இழுத்துச் சென்றுள்ளான். அங்கு துணி துவைக்கும் கல்லில் குழந்தையை படுக்க வைத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து துண்டித்துள்ளான்.

குழந்தையின் கை கால்களை அமுக்கி பிடித்துக் கொண்டு ஈவு இரக்கமின்றி குழந்தையின் தலையை அறுத்து எடுத்த அவன், குழந்தையின் உடலை அங்கேயே போட்டுவிட்டு தலையை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளான்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனாலும் அவர்களை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாத அந்த இளைஞன், சிறுமி லெமோரியாவின் தலையை அப்பகுதியில் இருந்த ஊரணியில் வீசியுள்ளான்.

இதனை அறிந்த எமனேஸ்வரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை கைபற்றினர். பின்னர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஊரணியில் வீசப்பட்ட குழந்தையின் தலையை மீட்டனர்.

குழந்தையை கொடூரமாக கொலை செய்த சஞ்சய்

இந்நிலையில் குழந்தையை துடிக்க துடிக்க கொலை செய்த அந்த கொடூர மாமன் சஞ்சய் எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான். அவனை கைது செய்த போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது சஞ்சயின் மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்குகளில் இருந்து ஜாமின் பெறுவதற்காக தேசிங்குராஜா உதவியுள்ளார்.

அப்போது சஞ்சய் மனநலம் பாதித்தவர் என மருத்துவ சான்று பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சையை அவரது உறவினர்கள் பைத்தியம் என கூறி கேலி செய்துள்ளனர்.

இதனால் வழக்கறிஞர் தேசிங்குராஜாவை பழிவாங்க நினைத்த சஞ்சய், கஞ்சா போதையில் அவரது குழந்தையை கொடூரமாக கொலை செய்ததாக கூறியுள்ளான். பரமக்குடி மக்களை பதைபதைக்க செய்த இந்த கொடூர கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்!

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் ச... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? அதிர்ச்சி தகவல்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ‘யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் அதன் உரிமையாள... மேலும் பார்க்க

'உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்' - எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று... மேலும் பார்க்க

சென்னை: ஏஐ மூலம் ஆபாச வீடியோ - மணிப்பூர் இளம் பெண்ணை பழிவாங்க ஆசைப்பட்ட டிரைவர் சிக்கியது எப்படி?

மணிப்பூரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2024-ல் சென்னை சூளைமேடு பகுதியில் தங்கியிருந்து சலூன் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் பைக் கால்டாக்ஸி மூலம் அடிக்கடி பயணித்திருக... மேலும் பார்க்க

கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை - பள்ளி மாணவர்கள் உதவியோடு உடலை காட்டில் எரித்த பெண் பிரின்சிபால்

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் அருகில் உள்ள செளசாலா வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கடந்த 15ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் எரிந்து கிடந்... மேலும் பார்க்க

அரியலூர்: பச்சிளங்குழந்தை கழிவறைக்குள் அமுக்கி கொலை; இளம் பெண் கைது; பகீர் பின்னணி என்ன?

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டராதீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ்.இவர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு, க... மேலும் பார்க்க