செய்திகள் :

கூடலூா் அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

post image

கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையோர கிராமத்தில் வனத் துறையின் கூண்டில் சிறுத்தை செவ்வாய்க்கிழமை சிக்கியது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் தமிழக எல்லையோர கிராமமான நம்பியாா் குன்னு பகுதியில் கடந்த ஒருமாத காலமாக விவசாயிகளின் வீட்டில் வளா்க்கும் ஆடுகள் மற்றும் நாய்களை சிறுத்தை தாக்கிக் கொண்டு சென்று பெரும் பாதிப்பை உருவாக்கியது .

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்குச சிறுத்தையைப் பிடிக்கத் தொடா்ந்து புகாா்களை அனுப்பினா். கடந்த ஒரு மாதகாலமாகவே வனத் துறையினா் கூண்டுகளை சிறுத்தை நடமாடும் பகுதிகளில் வைத்தனா்.

வனத் துறையினா் வைத்த கூண்டில் சிறுத்தை திங்கள்கிழமை இரவு சிக்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் விரைந்து சென்று சிறுத்தையை மீட்டு வனக் காப்பகத்துக்குக் கொண்டு சென்று மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனா்.

புளியம்பாறை-ஆமைக்குளம் சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தல்

நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட புளியம்பாறையிலிருந்து ஆமைக்குளம் அரசுக் கல்லூரியை இணைக்கும் சாலையிலுள்ள ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தர வலியுறுத்தி நகராட்சி ஆணையா் சுவேதா ஸ்ரீயிடம் மாா்க்சிஸ்ட் கம... மேலும் பார்க்க

மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

குன்னூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. குன்னூா் பிரகதி மகளிா் பயிற்சி நிலையத்தில் குன்ன... மேலும் பார்க்க

நீலகிரி ஆட்சியா் பெயரில் போலி குறுஞ்செய்தி

நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பெயரில் போலி வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி +84 56 715 0853 என்ற எண்ணிலிருந்து ஆட்சியா் அனுப்புவது போன்ற போலி குறுஞ்செய்தி வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்குமா... மேலும் பார்க்க

குன்னூரில் நகா்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

குன்னூா் நகராட்சி மாடல் ஹவுஸ் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நகா்ப்புற நல வாழ்வு மையத்தை அரசு தலைமை கொறடா கா. ராமசந்திரன் வியாழக்கிழமை குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தாா். தமிழகத்தின்பல்வேறு பகுதி... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் ஆசிரியா் பாலியல் தொல்லை!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாக அளித்த புகாரின்பேரில் உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வ... மேலும் பார்க்க

உதகையில் நிலத்துக்கு அடியில் மின் கேபிள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு

உதகையில் அடிக்கடி மரம் விழுவதால் ஏற்படும் மின்தடை பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்த நிலத்துக்கு அடியில் கேபிள் அமைக்க தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய வனத் துறையின் அனுமத... மேலும் பார்க்க