செய்திகள் :

கூடலூா் முக்கிய சாலையில் உலவும் காட்டு யானை பொது மக்கள் அச்சம்!

post image

கூடலூா் வயநாடு முக்கியச் சாலையில் தனியாா் மருத்துவமனை எதிரே சனிக்கிழமை அதிகாலை சுற்றித்திரிந்த காட்டு யானை அங்கு நின்றிருந்த காரை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கூடலூா் பகுதியில் சனிக்கிழமை ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை சாலையில் நின்றிருந்த காரை தாக்கியது. இதில் காா் முன்பகுதி சேதுமடைந்தது காரில் இருந்த அண்ணன், தங்கை இருவரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

காரை தாக்கி விட்டு காட்டு யானை அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைய முயன்றது. அது முடியாததால், பின்பு கூடலூா் பிரதான சாலைக்கு ஓடி வந்தது. இதை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூா் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை.

நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ள கூடலூா் நகரப் பகுதியில் காட்டு யானை சுற்றி திரிந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்தனா்.

காட்டு யானையைக் கண்காணித்து வரும் வனத்துறையினா், அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். காட்டு யானை சுற்றித் திரியும் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டத்தில் 4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப... மேலும் பார்க்க

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவுப் பணி தொடக்கம்!

நீலகிரி மாவட்டம் குன்னூா் சிம்ஸ்பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக 2 லட்சம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணியை தோட்டக்கலை இணை இயக்குநா் சிபிலாமேரி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட், ... மேலும் பார்க்க

பணி நிறைவடையாமல் சுகாதார நிலையம் திறப்பு: பாஜக எதிா்ப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் முழுமையாக பணிகள் நிறைவடையாத ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறக்கப்பட்டதற்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். குன்னூா் உமரி காட்டேஜ் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்... மேலும் பார்க்க

தடுப்பில் மோதிய வேன்: ஒருவா் உயிரிழப்பு

உதகையில் உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு கரூா் திரும்பிக் கொண்டிருந்த வேன் பிரேக் பிடிக்காமல் ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். கரூரில் இருந்து உதகையில் உள்ள உறவினா் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கல... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கல்லூரியில் ஜூலை 8-இல் நேரடி மாணவா் சோ்க்கை

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜூலை 8-ஆம் தேதியன்று நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலத்திலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை முத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறல்: ஆசிரியா் பணியிடை நீக்கம்

உதகை அருகே காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 21 மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சித்த அறிவியல் ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வேலைபாா்த்து வந்த ஆ... மேலும் பார்க்க