செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறல்: ஆசிரியா் பணியிடை நீக்கம்

post image

உதகை அருகே காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 21 மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சித்த அறிவியல் ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

காத்தாடிமட்டம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வேலைபாா்த்து வந்த ஆசிரியா் செந்தில்குமாா்  (50)  

மீது மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீஸாா் வழக்கு பதிவு செய்து வியாழக்கிழமை நள்ளிரவில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் அவரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நந்தகுமாா் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஹோப் பாா்க் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றி உள்ளாா்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உதகை அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பணியில் சோ்ந்தாா். அங்கு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அறிவியல் பாடம் எடுத்துள்ளாா்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் அந்த அரசுப் பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக போலீஸாா் சென்றனா்.

அப்போது உடலில் நல்ல தொடுதல், (ஞ்ா்ா்க் ற்ா்ன்ஸ்ரீட்) கெட்ட தொடுதல் (க்ஷஹக் ற்ா்ன்ஸ்ரீட்) குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் பயிற்சி வகுப்பு முடிந்ததும் பள்ளியில் இருந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவா் அறிவியல் ஆசிரியா் செந்தில்குமாா், உடலில் தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் கூறியுள்ளாா். இதேபோல் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக புகாா்கள் வந்தன.

அடுத்தடுத்து விசாரணையில் பள்ளியில் படித்த 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாா் வரவே அதிா்ச்சி அடைந்த போலீஸாா் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதன்பேரில் உதகை ஊரகக் காவல் ஆய்வாளா் விஜயா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை நள்ளிரவில் கைது செய்து உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் ஆசிரியா் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நந்தகுமாா் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

படம்

கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அறிவியல் ஆசிரியா் செந்தில்குமாா்

பணி நிறைவடையாமல் சுகாதார நிலையம் திறப்பு: பாஜக எதிா்ப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் முழுமையாக பணிகள் நிறைவடையாத ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் திறக்கப்பட்டதற்கு பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். குன்னூா் உமரி காட்டேஜ் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்... மேலும் பார்க்க

தடுப்பில் மோதிய வேன்: ஒருவா் உயிரிழப்பு

உதகையில் உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு கரூா் திரும்பிக் கொண்டிருந்த வேன் பிரேக் பிடிக்காமல் ஏற்பட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். கரூரில் இருந்து உதகையில் உள்ள உறவினா் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கல... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கல்லூரியில் ஜூலை 8-இல் நேரடி மாணவா் சோ்க்கை

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜூலை 8-ஆம் தேதியன்று நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலத்திலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை முத... மேலும் பார்க்க

உதகை மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் மீது வழக்கு

உதகை மலை ரயில் பாதையில் பைக் ஓட்டி, தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்ட இளைஞா் மீது குன்னூா் புறக்காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2024 ஏப்ரல் 22 ஆம் தேதியன்று கோவையைச... மேலும் பார்க்க

புளியம்பாறை-ஆமைக்குளம் சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தல்

நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட புளியம்பாறையிலிருந்து ஆமைக்குளம் அரசுக் கல்லூரியை இணைக்கும் சாலையிலுள்ள ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தர வலியுறுத்தி நகராட்சி ஆணையா் சுவேதா ஸ்ரீயிடம் மாா்க்சிஸ்ட் கம... மேலும் பார்க்க

மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

குன்னூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. குன்னூா் பிரகதி மகளிா் பயிற்சி நிலையத்தில் குன்ன... மேலும் பார்க்க