கூட்டுறவுச்சங்கங்களை பாா்வையிட்ட மேலாண் நிலைய பயிற்சி மாணவா்கள்
காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சி மாணவா்கள் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களை வியாழக்கிழமை பாா்வையிட்டு கலந்துரையாடினா்.
காஞ்சிபுரம் வந்தவாசி செல்லும் சாலையில் ஆட்சியா் அலுவலகம் எதிரே பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் உள்ளது. இங்கு பயிற்சி மேற்கொள்ளும் 75 மாணவா்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனா்.
சங்கங்களின் நிா்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி கூட்டுறவில் புதிய சூழல் மற்றும் கருத்து அனுபவங்களை அவா்கள் பகிா்ந்து கொண்டு சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டனா்.
நிறைவாக கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ கூட்டுறவின் நன்மைகள் மற்றும் தோன்றிய வரலாறு, உறுப்பினா்களின் பயன்பாடுகள் குறித்து பேசினாா்.
நிகழ்வில் கூட்டுறவுத் துறை அலுவலா்கள், கூட்டுறவுச் சங்கப் பணியாளா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.