செய்திகள் :

கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ காலமானார்!

post image

பிரபல கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ 87 வயதில் காலமானார்.

கிழக்கு ஆப்பிரிக்காவின் முக்கியமான எழுத்தாளராக அறியப்படும் கூகி வா தியாங்கோ தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதி வந்தார். பின்னர் காலனித்துவ எதிர்ப்பின் காரணமாக தனது சொந்த மொழியிலேயே எழுதிப் புகழ்பெற்றார்.

அரசுக்கு எதிராக எழுதியதால் 1970ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் வசித்து வந்த கூகி வா தியாங்கோ தனது 87ஆவது வயதில் இறந்ததாக அவரது மகள் சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

கூகி வா தியாங்கோ இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கட்டுரை என எழுதியுள்ளார். நோபல் பரிசுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

தமிழில் இவரது நாவல்கள், சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அவரது நாவல்களான இடையில் ஓடும் நதி, சிலுவையில் தொங்கும் சாத்தான், கறுப்பின மந்திரவாதி, மீள் வருகை (சிறுகதைகள்) மிகவும் புகழ்பெற்றவை.

கூகி வா தியாகோ இறப்பு குறித்து அவரது மகள், “எனது தந்தை இறந்துவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். முழுமையான வாழ்க்கையை வாழ்ந்த அவர் நன்றாகப் போராடினார்” எனக் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள், வாசகர்கள் கூகி வா தியோங்கோவிற்கு இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கென்யாவின் எதிர்கட்சி தலைவர் மார்த்தா வாங்கரி கருவா தனது சமூக வலைதள பக்கத்தில், “புகழ்பெற்ற எழுத்தாளர், பேராசிரியர் கூகி வா தியோ மறைவுக்கு அவரது குடும்பம், நண்பர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

மண்ணின் மைந்தன், சிறந்த தேசப்பற்று மிக்க கூகி வா தியாங்கோவின் அடிசுவடுகள் காலத்தினால் அழியாது நிற்கும்” எனக் கூறியுள்ளார்.

போலந்தில் இன்று இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்

போலந்தின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் கடந்த மே 18-ஆம் தேதி நடைபெ... மேலும் பார்க்க

இரும்புக்கு 50% கூடுதல் இறக்குமதி வரி: டிரம்ப் அறிவிப்பு

பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்புக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியை 50 சதவீதமாக உயா்த்தவிருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.இது குறித்து பென்சில்வேனியா மாகாணம், பிட்ஸ... மேலும் பார்க்க

ஜெர்மனியில் வீட்டின் மீது மோதிய சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

ஜெர்மனியில் வீட்டில் மொட்டை மாடியில் சிறிய ரக விமானம் மோதியதில் 2 பேர் பலியானார்கள். மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மொட்டை மாடியில் சனிக்கிழமை சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்... மேலும் பார்க்க

தலிபான் அரசுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு அரசுகளும் தங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடைய... மேலும் பார்க்க

நைஜீரிய பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 151 ஆக உயர்வு! 3000 பேர் வெளியேற்றம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மோக்வா நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் பலியாவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. நைஜர் மாகாணத்திலுள்ள முக்கிய சந்தை நகரமான மோக்வாவில், பெய்த பருவமழையால் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் சிக்கினர்

பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 34 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரச... மேலும் பார்க்க