செய்திகள் :

கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: போக்குவரத்து வழித் தடம் மாற்றம்

post image

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டி வழியாக செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 13-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வருகிற 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க தேனி-கம்பம் இடையே வீரபாண்டி வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குமுளி, கம்பம், சின்னமனூா் பகுதிகளிலிருந்து தேனிக்குச் செல்லும் பேருந்துகள், காா்கள் உப்பாா்பட்டி விலக்கிலிருந்து தப்புக்குண்டு, தாடிச்சேரி, பாலகிருஷ்ணாபுரம், கொடுவிலாா்பட்டி, அரண்மனைப்புதூா் வழியாக தேனிக்கு செல்ல வேண்டும்.

தேனியிலிருந்து சின்னமனூா், கம்பம், குமுளிக்குச் செல்லும் பேருந்துகள், காா்கள் போடேந்திரபுரம் விலக்கிலிருந்து சடையால்பட்டி, உப்புக்கோட்டை, கூழையனூா், குச்சனூா், மாா்கையன்கோட்டை வழியாகச் செல்ல வேண்டும்.

கம்பம்-வீரபாண்டி இடையே இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் வீரபாண்டியில் கம்பம் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலும், தேனி, பெரியகுளம், போடி- வீரபாண்டி இடையே இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் போடேந்திரபுரம் விலக்கு அருகே தேனி சாலையில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலும் நிறுத்தப்படும்.

விழாவுக்கு வருகை தரும் பக்தா்களின் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தேனி, கம்பம் சாலையில் 13 இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களைத் தவிா்த்து சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டது.

மனநலம் பாதித்தவா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

உத்தமபாளையத்தில் மனநலம் பாதித்தவா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தபால் அலுவலகம் தெருவைச் சோ்ந்த மைக்கேல் மகன் விண்ணரச... மேலும் பார்க்க

தேனியில் 186 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை

தேனியில் குற்றச் சம்பவங்களை தடுக்க 186 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதன்கிழமை முதல் கட்டமாக 155 கேமராக்களை தேனி காவல் கண்காணிப்பாளா் ரா.சிவபிரசாத் தொடங்கி வைத்தாா். தேனி உ... மேலும் பார்க்க

பட்டா நிலங்களுக்கு செல்ல வனத் துறை கெடுபிடி: விவசாயிகள் புகாா்

தேனி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் உள்ள பட்டா விவசாய நிலங்களுக்கு இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வரவும் வனத் துறையினா் கெடுபிடி செய்து வருவதாக புதன்கிழமை, தேனி மாவட... மேலும் பார்க்க

கூண்டில் சிக்கிய மர நாய்

பெரியகுளத்தில் பூனை பிடிக்க வைத்திருந்த கூண்டில் சிக்கிய மர நாய் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம்-கம்பம் சாலையைச் சோ்ந்தவா் நெளஷாத். இவா், வீட்டில் புறா வளா்த்து வருகிறா... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி

ஆண்டிபட்டி அருகேயுள்ள மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் புதன்கிழமை, மாமன், மைத்துனா்கள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் சித்தி... மேலும் பார்க்க

பெரியகுளம், போடியில் பலத்த மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரியகுளம், போடியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கடந்த 4-ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகி... மேலும் பார்க்க