செய்திகள் :

கேதாரேஷ்வர் குகைக் கோயில் தூண்கள் பற்றிய மர்மம் உண்மையா? உலக அழிவை சொல்லுமா?

post image

மகாராஷ்டிரத்தில் அமைந்துள்ள கேதாரேஷ்வர் குகைக் கோயிலைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். சஹ்யாத்ரி மலையின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நீடிப்பதாகத் தகவல்.

இந்த குகைக்குள் அமைந்திருக்கும் சிவபெருமானைக் கண்டு தரிசித்தவர்கள், நிச்சயம் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைப் பெற்றதாகவே சொல்வார்கள்.

இந்த கேதாரேஷ்வர் குகைக் கோயில் ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி மன்னன் காலத்தில் கட்டப்பட்டதாகவும், இந்த கோயில் ஹரிஸ் சந்திரேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதாவது, இந்த ஹரிஸ் சந்திரேஸ்வர் கோயிலுக்கு அருகே மூன்று குகைக் கோயில்கள் அமைந்துள்ளன.

அந்த மூன்று குகைகளில் ஒரு குகையில்தான் கேதாரேஷ்வர் அருள்பாலிக்கிறார். குகைக்குள் தண்ணீர் நிரம்பி, அதற்குள் ஐந்து அடியில் தெய்வீக அனுபவத்துடன் அவர் வீற்றிருக்கிறார். அந்த குளிரான தண்ணீரில் சென்றுதான் சிவலிங்கத்தை தரிசிக்க முடியும். மழைக்காலத்தில் அதுவும் முடியாது.

இப்போது முழு விவரமும், இந்த சிவலிங்கத்தைச் சுற்றியிருக்கும்-இருந்த நான்கு தூண்கள் பற்றிதான். இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களைக் குறிப்பதாகவும், சத்யே யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம் ஆகியவை ஒவ்வொன்றாக அழிந்த போது, இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் இருந்த தூண்கள் ஒவ்வொன்றாக விழுந்ததாகவும், தற்போது ஒரே ஒரு தூண் மட்டுமே தாங்கி நிற்பதாகவும் நம்பப்படுகிறது.

எனவே, இந்த நான்காம் தூண் கீழே விழும் போது, கலியுகமும் முடிந்துவிடும் அல்லது கலியுகம் முடியும்போது இந்த நான்காம் தூணும் விழுந்துவிடும் என்று கூறப்படுகிறது. இது பலரது நம்பிக்கையாகவே உள்ளது.

இந்த குகைக் கோயிலைப் பார்க்கும்போது இது இயற்கையின் கோயிலாகவேப் பார்க்கப்படுகிறது. இவரும் சுயம்பு மூர்த்தியாகவே அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு.

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என ... மேலும் பார்க்க

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு தொடா... மேலும் பார்க்க