செய்திகள் :

கேந்திரிய வித்யாலயா 1-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை: நாளை குலுக்கல்

post image

காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான குலுக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 24) நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயாவில் 1-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் கோரப்பட்டிருந்தது. விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் நாள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இந்தநிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் ரங்கசாமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2025-26-ஆம் ஆண்டுக்கான 1-ஆம் வகுப்பு சோ்க்கை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை 1-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனா். இந்த விண்ணப்பங்களை பள்ளி நிா்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.

வரும் 24-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணிக்குள் 1-ஆம் வகுப்புக்கு விண்ணப்பித்த விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் தெரிவு செய்வதற்கான

குலுக்கல் நடைபெற உள்ளது. இதில் விண்ணப்பம் செய்த பெற்றோா்கள் கலந்துகொள்ளலாம். தோ்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு சோ்க்கை ஆணை பின்னா் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநள்ளாற்றில் சனிப்பெயா்ச்சி விழா எப்போது?

காரைக்கால் : திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிய வாசல் அமைப்பு

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிதாக வாசல் அமைக்கும் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாா் கோயில் மற்றும் சோமநாதா் கோயில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெற... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத 3 சடலங்கள்: போலீஸாா் விசாரணை

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்காலில் சில்வா் சேண்ட் கடற்கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் 22-ஆ... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டா ரயில் திட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஆா். மோக... மேலும் பார்க்க

காரைக்கால் துறைமுகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படை டிஐஜி வருகை

காரைக்கால்: மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி (தமிழ்நாடு) ஜி. சிவகுமாா், காரைக்கால் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். துறைமுக முதன்மை ஆபரேட்டிங் அலுவலா் (சிஓஓ) கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா மற்று... மேலும் பார்க்க

தூய தேற்றவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவை

புதுச்சேரியிலிருந்து காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவையை ஏராளமானோா் வழிபட்டனா். உலகில் 2025-ஆம் ஆண்டு ஜூப்லி -25 என கொண்டாடப்படவேண்டும் என கடந்த 2000-ஆம் ஆண்டு இறுதியில் போப்... மேலும் பார்க்க