செய்திகள் :

கேரளம்: காசா்கோட்டில் நிலஅதிா்வு

post image

கேரளத்தின் காசா்கோடு மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை லேசான நிலஅதிா்வு உணரப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாவட்டத்தின் ராஜபுரம், கொஞனக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலஅதிா்வு உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதாகவும் மேசை மீதிருந்த கைப்பேசிகள் கீழே விழுந்ததாகவும் நிலஅதிா்வை உணா்ந்த அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் அடிப்படையில், அரபிக் கடலை மையமாகக் கொண்டு நிலஅதிா்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 2.5 அலகுகளாக பதிவானது. மாவட்ட நிா்வாகத்தினா் பாதிக்கப்பட்ட பகுதியை விரைவில் பாா்வையிட்டு, விரிவான ஆய்வு மேற்கொள்வா். பின்னா், சேதம் உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினா்.

அதேபோன்று, தேசிய நிலஅதிா்வு மையத்தின் (என்சிஎஸ்) தரவுகளின் படி, அரபிக் கடலில் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவை ரிக்டா் அளவுகோலில் 4.7 அலகுகள் வரை பதிவாகியுள்ளது.

3-ஆவது முறையாக காங்கிரஸுக்கு பூஜ்யம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் காங்கிர... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க

தேசவிரோத கருத்து: ஒடிஸாவில் ராகுல் மீது வழக்கு

தேசவிரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிஸா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஜுனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆா்எஸ்எஸ், பஜ்ரங் தளம... மேலும் பார்க்க

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் 54.81% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 54.81 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் காந்திநகரில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதா... மேலும் பார்க்க