செய்திகள் :

கேரளம்: வன விலங்குகள் தாக்குதலில் 344 பேர் பலி!

post image

கேரளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வன விலங்குகள் தாக்குதலில் 344 பேர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வனத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கேரளத்தில் மட்டும் 2021 - 2025 ஆண்டுகளில் 344 பேர் வன விலங்குகள் தாக்கி பலியானதாகத் தெரிவித்தார்.

இதில், 180 பேர் பாம்பு கடித்ததால் பலியானதாகவும், 103 பேர் யானைகள் தாக்கியும் 35 பேர் காட்டுப் பன்றிகள் தாக்கி பலியானதாகவும் அவர் கூறினார். 4 பேர் புலிகள் தாக்கி பலியாகியுள்ளனர்.

”மனிதர்களின் வாழ்வுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே நாம் சமநிலையைப் பேண வேண்டும். கோவையில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று ஆய்வு மையத்தை மனித - விலங்கு மோதல் தொடர்பான ஆய்வு மையமாக முன்னேற்ற முடிவெடுத்துள்ளோம். யானைகளின் வழித்தடங்களை கண்காணித்து அதுபற்றி உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்.

மேலும், ரயில்வே துறையுடன் இணைந்து யானைகள் வழித்தடம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்று அமைச்சர் பேசினார்.

காட்டுப் பன்றிகளைக் கொல்ல பாதிக்கப்பட்ட பல கிராம பஞ்சாயத்துகளுக்கு மாநில அரசின் மூலம் அதிகாரம் வழங்க மத்திய அரசு அனுமதிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பாலக்காடு பகுதியில் பல இடங்களில் காட்டுப் பன்றிகள் மனிதர்களைத் தாக்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் வயநாடு பகுதிக்கு பார்வையிட சென்ற அமைச்சர் விலங்குகளின் தாக்குதல் தொடர்பான விவரஙகளைக்க் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | குஜராத்: மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் அரசு பள்ளிகள் மூடல்!

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பு!

இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க 7,506.48 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பி... மேலும் பார்க்க

அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?

புது தில்லி: இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10-ஆம் தேதி கொண்டாடுவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளிட்ட சேவையில் சிக்கல்..

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஏப். 1ஆம் தேதி காலையில் இருந்து பகல் வரை பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளில் சிக்கலை சந்தித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.மொபைல் வங்கி, ஏட... மேலும் பார்க்க