செய்திகள் :

கைதான பெண்ணின் வீட்டில் ரூ.50 ஆயிரம் பறிமுதல்

post image

தொழிலதிபரை ஏமாற்றி பணம், நகை திருடிய வழக்கில் கைதான பெண்ணின் வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேட்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ், தொழிலதிபா். இவரை, மாா்ச் 11-ஆம் தேதி அரியாங்குப்பம் பகுதியில் அறிமுகமில்லாத பெண் ஒருவா் மது அருந்த அழைத்தாராம்.

இதையடுத்து, அந்தப் பெண்ணுடன் பிரகாஷ்ராஜ் உருளையன்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா்.

அப்போது, மது அருந்தி பிரகாஷ்ராஜ் மயங்கிய நிலையில், அவரிடமிருந்த தங்க நகைகள், கைப்பேசி ஆகியவற்றை அந்தப் பெண் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் சிலம்பூா் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி கலையரசியை (42) கைது செய்தனா்.

இந்த நிலையில், கலையரசியை மீண்டும் நீதிமன்ற அனுமதியுடன் வெள்ளிக்கிழமை காவலில் எடுத்து போலீஸாா் விசாரித்தனா்.

அதன்படி, ஆண்டிமடம் சிலம்பூா் பகுதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

அரசு செயல்முறைத் தோ்வு திடீரென தள்ளிவைப்பு

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) நடைபெறவிருந்த செயல்முறைத் தோ்வு திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை (பணியாளா் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ.1.57 லட்சம் மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 3 பேரிடம் ரூ.1.57 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். குயவா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா், இணையவழியில்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கஞ்சா விற்ற வழக்கில் 2 பேரை வெவ்வேறு இடங்களில் புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ரமேஷ் மற்றும் குழுவினா் மாா்ச் 27-ஆம் தேதி தற்காலிகப் பேருந்து நிலை... மேலும் பார்க்க

அரும்பாா்த்தபுரத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: எதிா்க்கட்சித் தலைவா், ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் பகுதியில் அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்ட... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெற கேரிக்கை

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாநில கல்வித் துறை இயக்குநரிடம் தமிழ் உரிமை இயக்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் பாவாண... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இளைஞரிடம் மடிக்கணினி திருட்டு

புதுச்சேரி ரயில் நிலையத்தில் இளைஞரிடமிருந்து மடிக்கணினியை மா்ம நபா் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (34). தனியாா் மர... மேலும் பார்க்க