செய்திகள் :

கையில் ஏர் கன்னுடன் வீடுகளில் திருட நோட்டமிட்ட இளைஞர்கள்; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்- என்ன நடந்தது?

post image

வீடுபுகுந்து திருடுவதற்கு ஏர் கன்னுடன் சுற்றிவந்த இளைஞரை பிடித்து கிராம மக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பானங்குளத்தில் சந்தேகப்படும்படி இளைஞர்கள் இருவர் டூவீலரில் சுற்றிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த கிராம மக்கள் அவர்களை மடக்கி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் மேலும் சந்தேகமடைந்த கிராமத்தினர், அவர்கள் வைத்திருந்த பையை திறந்து காட்டுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட இளைஞர்களில் ஒருவர் கிராம மக்களின் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.

காவல் அலுவலகம்

மற்றொருவர் தப்பி ஓட முயலும்போது வளைத்து பிடித்த பொதுமக்கள் இதுபற்றி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலை தொடர்ந்து விரைந்து வந்த கிருஷ்ணன்கோவில் போலீஸார், பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பிடிபட்ட நபர் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 34) என தெரியவந்தது. தப்பி ஓடிய இளைஞர் ராமநாதபுரத்தை சேர்ந்த ஆரோக்கியஜான் என்பதும், இருவரும் அப்பகுதியில் வீடுகளில் திருடும் நோக்கத்திற்காக டூவீலரில் நோட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ராஜேஷ் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்ததில் 'ஏர் கன்' மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவர் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்ட ராஜேஷ் மீது 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், திருட்டு வழக்கில் கைதாகி சேலம் சிறையில் இருந்தபோது ஆரோக்கிய ஜான் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் இருவரும் நட்பாகி திருடுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜேஷை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 'ஏர் கன்' பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய ஆரோக்கிய ஜானை தீவிரமாக தேடிவருகின்றனர்" என்றனர்.

திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?

தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித... மேலும் பார்க்க

Karnataka Bank Theft: 'Money Heist' பார்த்து SBI வங்கியை கொள்ளை அடித்த மதுரை கும்பல் - பகீர் பின்னணி

மதுரையைச் சேர்ந்த விஜய்குமார், அஜய்குமார் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா தாவங்கேர் மாவட்டத்தில் இருக்கும் நியாமதி தலுகாவிற்கு பிழைப்புக்காகச் சென்று ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளனர். கட... மேலும் பார்க்க

கிளாமர் காளி கொலையில் தேடப்பட்டவர்; வெள்ளைக்காளியின் கூட்டாளி - மதுரை என்கவுன்ட்டர் பின்னணி

மதுரையில் வி.கே.குருசாமி - ராஜபாண்டி தரப்பினருக்குள் நீண்டகாலமாக பகை தொடர்ந்து வருகிறது. இதில் பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வந்த நிலையில், சில நாள்களுக்கு முன் குருசாமியின் உறவினர் கிளாமர் காளி என்ற... மேலும் பார்க்க

கள்ள நோட்டல்ல, கலர் நோட்டு - தப்பிய விசிக கடலூர் மாவட்ட பொருளாளர்; சிக்கிய துப்பாக்கிகள் - பின்னணி?

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டப் பொருளாளராக பதவி வகித்து வந்தார். இவரும் ஆவட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர... மேலும் பார்க்க

நெல்லை: 3 மாதங்களில் 41 பேருக்கு ஆயுள் தண்டனை; வழக்குகளை முடிப்பதில் தீவிரம் காட்டும் போலீஸார்

தென் மாவட்டங்களில் பதற்றமான ஊர்கள் நிறைந்தது நெல்லை மாவட்டம். ஆனால், போலீஸாரின் தீவிர கண்காணிப்பு, குற்றவாளிகளை கைது செய்தல், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருதலில் போலீஸார் ஒருங்கிணைந்து திறம்பட செயல்பட... மேலும் பார்க்க

லிவ்இன் உறவு; கருகலைப்பு - கும்பமேளா பிரபலம் மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிய இயக்குநர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் சமீபத்தில் நடந்த கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்பனை செய்து மோனலினா போஸ்லே என்ற பெண் பிரபலம் அடைந்தார். அப்பெண் சமூக வலைத்தளத்தில் பிரபலம் அடைந்ததால், அவர் இப்... மேலும் பார்க்க