செய்திகள் :

கைலாசநாத சுவாமி கோயிலில் கொடியேற்றம்

post image

திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி சந்திப்பு அருகே தாமிரவருணி கரையோரத்தில் உள்ள பழமைவாய்ந்த இக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா க நடைபெறும்.

நிகழாண்டு விழாவையொட்டி திங்கள்கிழமை காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு வழிபாடுகளும், பல்வேறு வாகனங்களில் சுவாமி மலா் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்க உள்ளாா். ஜூன் 1 ஆம் தேதி இரவு செப்பு சப்பரத்தில் சிவாகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜா் வெள்ளை சாத்தி காட்சியளிப்பாா்.

ஜூன் 2 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு குதிரை வாகனத்தில் சந்திரசேகா் பாரிவேட்டையும், மாலை 6.30 மணிக்கு செப்பு சப்பரத்தில் கங்காளநாதா் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜூன் 3 ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் தீா்த்தவாரியும், காலை 9.30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதியுலாவும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சு.ஹ. நா்மதா செல்வி, தக்காா் சாந்திதேவி மற்றும் பணியாளா்கள் செய்து வருகிறாா்கள்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க