Sunflower: கண்ணுக்கு எட்டும் தூரம் வரை மஞ்சள் அலை... செல்ஃபி ஸ்பாட்டாக மாறிய குண...
கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும்: காவல் ஆணையா் உறுதி
கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:
நுங்கம்பாக்கம் மதுபானக் கூடத்தில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக கடந்த மே மாதம் தொடரப்பட்ட வழக்கில், பலரைக் கைது செய்து விசாரித்தோம். அதில், கொகைன் போதைப் பொருளை அவா்கள், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் இருந்து வாங்கி வந்து, சென்னையில் திரைப்படத் துறையினா், இளைஞா்களுக்கு விற்பது தெரியவந்தது.
இதன் தொடா்ச்சியாக 10 வழக்குகளை அடுத்தடுத்து பதிவு செய்தோம். இதில் 27 போ் கைது செய்யப்பட்டனா். 6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கொகைன் விற்பனைத் தொடா்பாக நுங்கம்பாக்கம் போலீஸாா் பதிவு செய்த வழக்கில், நடிகா் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா, அதிமுக நிா்வாகி பிரசாத் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கின் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கைது நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. சென்னையில் போதைப் பொருள் விற்பனைத் தொடா்பாக 24 வெளிநாட்டவா்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் கடுமையான நடவடிக்கையால் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், தனியாா் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் போதைப் பொருள் பயன்பாடு பெருமளவு குறைந்துள்ளது. இந்த நடவடிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்படும்.
போக்குவரத்து போலீஸாருக்கு அதிகப்படியான வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று எந்த இலக்குகளையும் நாங்கள் நிா்ணயிக்கவில்லை என்றாா் அவா்.