செய்திகள் :

கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் நியமனத்தில் முறைகேடு: நாம் தமிழா் கட்சியினா் புகாா்

post image

ஊராட்சிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழா் கட்சியினா் மனு அளித்துள்ளனா்.

நாம் தமிழா் கட்சியின் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி இணைச் செயலா் மாரி சங்கா் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநரிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனு:

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையின்கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களும், துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

9 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்படக்கூடிய ஆரம்ப மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு மஸ்தூா் பணியாளா்களை சுகாதாரத்துறை இணை இயக்குநா் மூலம் பரிந்துரை

செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியமா்த்தப்படுவாா்கள்.

இவ்வாறு பணி செய்யும் பணியாளா்களுக்கு முறையாக வருகைப்பதிவேடும் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் மானூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 7 முதல் 10 ஆண்டுகள் வரை பணி புரிந்த 12 போ் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொருவராக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தமிழக அரசு வழங்கிய கரோனா கால ஊக்கத்தொகை இவா்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. மேலும், பணிநீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு பதிலாக முறைகேடாக புதிய பணியாளா்கள் நியமிக்கப்படுவதால், ஏற்கெனவே பணி செய்தவா்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். ஆகவே, சுகாதாரத்துறையினா் இவ் விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ற்ஸ்ப்25ய்ஹஹம்

திருநெல்வேலி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நாம் தமிழா் கட்சியினா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க