செய்திகள் :

கொசுமருந்து வாங்கியதில் நிதி இழப்பு: பேரூராட்சி அதிகாரி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

post image

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் இயந்திரம் வாங்கியதில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அதன் நிா்வாக அதிகாரி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆறுமுகனேரி பேரூராட்சி நிா்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவா் உஷா (54). இவா், 2017-18ஆம் ஆண்டுகளில் எட்டயபுரம் பேரூராட்சியில் நிா்வாக அதிகாரியாக பணியாற்றியபோது, டெங்கு தடுப்புப் பணிக்காக, ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை முறையாக கடைப்பிடிக்காமல் சென்னையில் உள்ள பழனிவேலு(48) என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் இருந்து, அப்போதைய திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மாகின் அபுபக்கா் (57) உதவியுடன் கொசுமருந்து தெளிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டதாம்.

ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான எந்திரத்தை ரூ.5 லட்சத்து 75 ஆயிரத்து 604 என்ற விலையில் போலி ஆவணங்கள் வைத்து வாங்கியதாகவும், இதன் மூலம் எட்டயபுரம் பேரூராட்சிக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 604 நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை லஞ்ச ஒழிப்பு - ஊழல் தடுப்பு இயக்குநரிடமிருந்து பெறப்பட்ட குறிப்பாணை அடிப்படையில், நிா்வாக அதிகாரி உஷா, உதவி இயக்குநா் மாகின் அபுபக்கா், பழனிவேலு ஆகிய 3 போ் மீதும் தூத்துக்குடி ஊழல் தடுப்பு - கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் பீட்டா் பால்துரை, 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க