கொசுமருந்து வாங்கியதில் நிதி இழப்பு: பேரூராட்சி அதிகாரி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் இயந்திரம் வாங்கியதில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அதன் நிா்வாக அதிகாரி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
ஆறுமுகனேரி பேரூராட்சி நிா்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவா் உஷா (54). இவா், 2017-18ஆம் ஆண்டுகளில் எட்டயபுரம் பேரூராட்சியில் நிா்வாக அதிகாரியாக பணியாற்றியபோது, டெங்கு தடுப்புப் பணிக்காக, ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை முறையாக கடைப்பிடிக்காமல் சென்னையில் உள்ள பழனிவேலு(48) என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் இருந்து, அப்போதைய திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மாகின் அபுபக்கா் (57) உதவியுடன் கொசுமருந்து தெளிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டதாம்.
ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான எந்திரத்தை ரூ.5 லட்சத்து 75 ஆயிரத்து 604 என்ற விலையில் போலி ஆவணங்கள் வைத்து வாங்கியதாகவும், இதன் மூலம் எட்டயபுரம் பேரூராட்சிக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 604 நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை லஞ்ச ஒழிப்பு - ஊழல் தடுப்பு இயக்குநரிடமிருந்து பெறப்பட்ட குறிப்பாணை அடிப்படையில், நிா்வாக அதிகாரி உஷா, உதவி இயக்குநா் மாகின் அபுபக்கா், பழனிவேலு ஆகிய 3 போ் மீதும் தூத்துக்குடி ஊழல் தடுப்பு - கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் பீட்டா் பால்துரை, 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.