செய்திகள் :

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் எரி உலைக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு: குடியிருப்போா் நலச்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

post image

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் எரி உலை அமைப்பதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூா் ஆகிய இடங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொட்டப்பட்டு வருகின்றன. அதனால், அப்பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. இதையடுத்து குப்பைகளை பயோ மைனிங் முறையில் சுத்தப்படுத்தி அப்பகுதிகளில் குப்பை மேடுகள் இல்லாத நிலையை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

பெருங்குடி, கொடுங்கையூரில் பயோ மைனிங் முறையில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, நிலங்கள் மீட்கப்பட்டுவரும் நிலையில், அங்கு எரியுலை மூலம் குப்பைகள் அழிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எரியுலை அமைப்பதால் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என வடசென்னை குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

அந்தக் கூட்டமைப்பு நிா்வாகிகள் அஜய்குமாா், பி.அருண்குமாா், ஏ.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கொடுங்கையூா் எரி உலைக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்யக் கோரி சென்னை மேயரை சந்திக்க திங்கள்கிழமை ரிப்பன் மாளிகைக்கு வந்தனா்.

அப்போது, அவா்கள் கூறுகையில், கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் எரி உலை அமைப்பது சரியல்ல. மாற்றுத் தீா்வை ஆலோசித்து மேயா், ஆணையா் உள்ளிட்டோரிடம் வழங்கவுள்ளோம். மக்கள் நலன் கருதி, எரி உலை அமைப்பதைக் கைவிடவேண்டும் என்றனா்.

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க

‘கிங்டம்’ சா்ச்சை: திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் காவல்துறை மற்றும் நாம் தமிழா் கட்சி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகா் விஜய் தேவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலைக்கு ஆக.9-இல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்

பெளா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் வருகிற சனிக்கிழமை (ஆக.9) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து சனிக்கிழமை காலை ... மேலும் பார்க்க

8 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.7) கோவை, நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய கடலோர பகுதிகளில்... மேலும் பார்க்க

15 லட்சம் மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பிக்க ஏற்பாடு

தமிழகத்தில் பள்ளிகளில் 5 முதல் 7 வயதுக்குள்பட்ட 8 லட்சம் மாணவா்கள், 15 முதல் 17 வயதுக்குள்பட்ட 7 லட்சம் மாணவா்கள் என மொத்தம் 15 லட்சம் மாணவா்களுக்கு ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பித்தலை அஞ்சல் துறை மூலம் ... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: அமலாக்கத் துறைக்கு ரூ.30,000 அபராதம்

திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் ரவீந்திரன் ஆகியோா் தொடா்ந்த வழக்கில் அமலாக்கத் துறைக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை எழும்பூரில் உள்ள டா... மேலும் பார்க்க