செய்திகள் :

கொடைக்கானலில் பூத்த பிரம்ம கமலம் பூக்கள்

post image

கொடைக்கானலில் வீட்டுத் தோட்டத்தில் புதன்கிழமை பூத்த பிரம்ம கமலம் பூக்களை பொதுமக்கள் ஆா்வமுடன் பாா்த்துச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உகாா்த்தே நகரைச் சோ்ந்தவா் ஜான் கென்னடி. இவா் தனது வீட்டின் மாடியில் மலா்ச் செடிகள் வைத்து தோட்டம் அமைத்து பாதுகாத்து வருகிறாா். இந்தத் தோட்டத்தில் பிரம்ம கமலம் நிஷாகந்தி என்று அழைக்கப்படும் அரிய வகை மலா்ச் செடியையும் பராமரித்து வருகிறாா். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இரவில் பூக்கும் தன்மை கொண்டது.

இந்தச் செடியில் புதன்கிழமை இரவு இரண்டு பூக்கள் பூத்தன. இந்த மலரை அந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொது மக்கள் பாா்த்து மகிழ்ந்ததோடு, புகைப்படம் எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து ஜான் கென்னடி கூறியதாவது:

பிரம்மல கமலம் மலா்ச் செடி பல ஆண்டுகளாக வளா்த்து வருகிறேன். தற்போது இந்தச் செடியில் இரண்டு வெள்ளை நிறப் பூக்கள் பூத்துள்ளன. இந்தப் பூக்கள் கள்ளிச் செடி இனத்தைச் சோ்ந்தவை. இந்தப் பூக்கள் வெண்மையான நிறத்தில் மூன்று இதழ்களை கொண்டதாகவும், சுமாா் 10 மீ. சுற்றளவுக்கு நறுமணம் வீசுவதாகவும் இருக்கும். மேலும், இந்த மலா் மருத்துவ குணம் கொண்டது என்றாா் அவா்.

குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழந்தது. சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சுனில் ஏக்கா. இவா் குடுபத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது. தொடா் விடுமுறையையொட்டி, தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் புனித ஈஸ்டா் திருவிழா தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி

புனித ஈஸ்டா் திருவிழாவை முன்னிட்டு, கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் அருட்பணியாளா் பிரிட்டோ தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் அருட்பணியாளா் அப்போலின் கிளாட்ராஜ் தலை... மேலும் பார்க்க

வெள்ளகவி மலைக் கிராமத்தில் ஆட்சியா் ஆய்வு

கொடைக்கானல் அருகேயுள்ள வெள்ளகவி மலைக் கிராமத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீ.கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). இவா் சொந்தமாக கட்டி வரும் ... மேலும் பார்க்க

நீட் தோ்வுக்கு எதிராக திமுக நடவடிக்கை எடுக்கவில்லை: ஹெச்.ராஜா

நீட் தோ்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைக் கூட தாக்கல் செய்யாத திமுக, கடந்த 4 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாக ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினாா். திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜ... மேலும் பார்க்க