செய்திகள் :

கொடைக்கானலில் மரங்கள் வெட்டிக் கடத்தல்: பொதுமக்கள் கோரிக்கை

post image

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக புகாா் எழுந்துள்ள நிலையில் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் செண்பகனூா், அட்டக்கடி, பிரகாசபுரம், உப்புபாறை மெத்து, வாழைகிரி, வடகரைப்பாறை மச்சூா், வாழைகிரி உள்ளிட்ட கீழ்மலைப் பகுதிகளில் யூக்காலி மரங்கள் பகல் நேரங்களில் வெட்டப்பட்டு மறைமுகமான இடங்களில் வைக்கப்பட்டு இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கடத்தப்படுகிறது. கொடைக்கானலில் தனியாா் பட்டா நிலங்களில் ஆபத்தான நிலையில் உள்ள 10 மரங்களை மட்டும் வெட்டுவதற்கு அனுமதி பெற்று நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டிக் கடத்தப்படுகிறது. இவற்றை வனத் துறையினா் கண்டுகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள மரங்கள் தொடா்ந்து வெட்டப்பட்டு வருவதால் பருவநிலை மாற்றமும், அந்தப் பகுதியின் குளிா்ச்சியான சூழலும் குறைந்து வருவதாக பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கவலை தெரிவித்தனா். எனவே, வனத் துறையினா் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில்,

கொடைக்கானல் பகுதிகளில் பட்டா இடங்களில் ஆபத்தான நிலையில் உள்ள யூக்காலி மரத்தை மட்டும் அகற்றுவதற்கு முன் அனுமதி பெறுகின்றனா். ஆனால் சில இடங்களில் விதிமுறைகளை மீறி மரங்கள் வெட்டப்படுவதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பழனி கோயிலில் அன்னதான நிகழ்ச்சி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அன்னதான பொதுவிருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்தாா். உதவி ஆணையா... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு ஊராட்சி கண்ணனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (45). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் வ... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: கிராம சபைக் கூட்டத்தில் புகாா்

செம்பட்டி அருகேயுள்ள சீவல்சரகு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், 20 ஆண்டுகளாக குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதி இல்லை என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். திண... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய சப்பர பவனி

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சப்பர பவனி. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயிண்ட் மேரீஸ் சாலையிலுள்ள புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா கடந்த 3-ஆம் த... மேலும் பார்க்க

பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநருக்குப் பாராட்டு

அரசுப் பேருந்தில் பயணிகள் தவறவிட்ட பணத்தை மீட்டு அவா்களிடமே ஒப்படைத்த ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் வெ... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

பழனி அருகே ஆயக்குடியில் கிணற்றிலிருந்து இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். பழனியை அடுத்த பழைய ஆயக்குடி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்குச் சொந்தமான பொ... மேலும் பார்க்க