செய்திகள் :

கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

post image

கொடைக்கானலில் தொடா்ந்து பலத்த காற்று நிலவி வருவதால், மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து பலத்த காற்றும், அவ்வப்போது லேசான சாரலும் நிலவி வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே பலத்த காற்று நிலவியது.

இதனால், கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதான சாலையான வாழைகிரி அருகே இருந்த ராட்சத மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதன் காரணமாக, இந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த வனத் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா், தாண்டிக்குடி காவல் துறையினா் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றினா். இதன் பிறகு, போக்குவரத்து சீரானது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கொடைக்கானலில் தற்போது பலத்த காற்று நிலவி வருகிறது. இதனால் பல இடங்களில் மின் கம்பிகள், மரக் கிளைகள், சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பிகள் கீழே விழுந்து வருகின்றன. எனவே, கொடைக்கானல் மலைச் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை மட்டும் அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனா்.

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் ப... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாயில் உடைப்பு: சாலையில் ஆறாக ஓடிய தண்ணீா்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கூட்டுக் குடிநீா் குழாயில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீா் ஆறாக ஓடியது. சின்னாளபட்டிக்கு கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் குழாய் பதிக்க... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ரயில் மறியல்: எம்பி உள்பட 1,522 போ் கைது

அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினா் உள்பட 1,522 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆத... மேலும் பார்க்க

நிலக்கோட்டை அருகே முளைப்பாரி ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள குளத்துபட்டி குழந்தை காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியத... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் திடீா் புகை: 30 நிமிஷங்கள் தாமதம்

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு புதன்கிழமை சென்ற வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வெளியேறியது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே சுமாா் 30 நிமிஷங்கள் ரயில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேல... மேலும் பார்க்க

தோட்டக் கலை விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்க மானியம்

மானியத்துடன் நுண்ணீா் பாசன வசதி அமைக்க குஜிலியம்பாறை தோட்டக் கலை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக குஜிலியம்பாறை வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் பா. முத்தரசு தெரிவித்தத... மேலும் பார்க்க