செய்திகள் :

கொட்டங்காடு, குலசேகரன்பட்டினத்தில் புதிய ரேஷன் கடைக் கட்டடங்கள் திறப்பு

post image

உடன்குடியை அடுத்த கொட்டங்காடு, குலசேகரன்பட்டினத்தில் புதிய ரேஷன் கடைக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின்கீழ் செயல்படும் கொட்டங்காடு ரேஷன் கடைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சத்திலும், குலசேகரன்பட்டினத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 13.56 லட்சத்திலும் புதிய ரேஷன் கடைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

கொட்டங்காட்டில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட துணைப் பதிவாளா் சக்தி பெமிலா தலைமை வகித்தாா். திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், உடன்குடி ஊராட்சித் தலைவா் ஹமைரா அஸ்ஸாப், துணைத் தலைவா் மால் ராஜேஷ், உறுப்பினா்கள் சரஸ்வதி பங்காளன், அஸ்ஸாப், ஜான் பாஸ்கா், ஆபித், பிரதீப் கண்ணன், மும்தாஜ் பேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கட்டடங்களை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கினாா்.

துணைப் பதிவாளா் (பொது விநியோகம்) சுப்புராஜ், செயலாட்சியா் வளன் தளபதி மைக்கேல், கள அலுவலா் மனோகா் பாரத், மாநில வா்த்தகரணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஒன்றியச் செயலா்கள் பாலசிங், இளங்கோ, மாவட்டப் பிரதிநிதிகள் மதன்ராஜ், ஜெயபிரகாஷ், செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மகேஸ்வரன், செட்டியாபத்து ஊராட்சி முன்னாள் தலைவா் பாலமுருகன், குலசேகரன்பட்டினம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கச் செயலா் ஆனந்தராஜ் வரவேற்றாா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க