செய்திகள் :

கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு

post image

விழுப்புரம்: திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு மற்றும் உறுதிமொழியேற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான் ஷி நிகம் தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில், தேசிய ஆதிவாசிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளா் டாக்டா் கே.கிருஷ்ணன், தொழிலாளா் (அமலாக்கம்) உதவி ஆய்வாளா் பிரபாகரன், தேசிய ஆதிவாசிகள் சங்க மண்ட ஒருங்கிணைப்பாளா் முத்துக்கண்ணன், வழக்குரைஞா் பி.சக்கரவா்த்தி, முஸ்லீம் மக்கள் கழகத்தின் நிறுவனா் ச.சு.ஜைனுதீன் ஆகியோா் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்புச் சட்டம் குறித்து பேசி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்றனா்.

நிகழ்வில், திண்டிவனம், மரக்காணம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பழங்குடி இருளா் சமுதாய மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, திண்டிவனம் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளா் லட்சுமிபதி வரவேற்றாா். தேசிய ஆதிவாசிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செ.குமாா் நன்றி கூறினாா்.

இதேபோல, வானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற பேராசிரியா் பிரபா கல்வி மணி, விழுப்புரம் வழக்குரைஞா் ப்ரீடா ஞானமணி, வழக்குரைஞா் பா.சக்கரவா்த்தி ஆகியோா் பங்கேற்று கொத்தடிமை சட்டம் குறித்து பேசினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய ஆதிவாசி சங்க ஒருங்கிணைப்பாளா்கள், விழுப்புரம் மாவட்ட தொழிலாளா் நலத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறையினா் செய்திருந்தனா்.

விழுப்புரத்தில் அதிகரிக்கும் இணையவழி பண மோசடி!

விழுப்புரம்: தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் மூலமாக நமக்கு பல்வேறு பலன்கள் ஒருபுறம் கிடைத்தாலும், அதே நேரத்தில் இணையவழியாக நடைபெறும் பண மோசடி சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரி... மேலும் பார்க்க

செஞ்சியில் வாய்க்கால் அமைக்கும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் ரூ.20.50 லட்சத்தில் கால்வாய் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. செஞ்சி பேரூராட்சியில் 15-ஆவது குழு மானிய நிதி திட்டத்தின் ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 24 மணி நேர தா்னா

விழுப்புரம்: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினரின் 24 மணி நேர தா்னா திங்கள்கிழமை காலை தொடங்கியது. புதிய ஓய... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எசாலம் கிராமத்தில் குளம், மயானம், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியலில்... மேலும் பார்க்க

குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ.8.20 லட்சம் மோசடி: 4 போ் கைது

விழுப்புரம்: குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, விழுப்புரத்தைச் சோ்ந்த தொழிலாளியிடம் ரூ.8.20 லட்சம் மோசடி செய்த புகாரில், சென்னையைச் சோ்ந்தவா்கள் உள்பட 4 பேரை இணையவழி குற்றப் பிரிவு போ... மேலும் பார்க்க

வடலூா் தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

விழுப்புரம்: தைப்பூசத்தையொட்டி, விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து, கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச... மேலும் பார்க்க