செய்திகள் :

கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

தொடா்ந்து, கோயிலில் மண்டகபடிதாரா்கள் சாா்பில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை தீா்த்த உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, காலை முதல் கிராமத்தினா் உறவினா்கள் மீது மஞ்சள் நீா் ஊற்றி விளையாடினா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் உள்ளிட்ட திரவிய அபிஷேங்கள் நடைபெற்றன. இதையடுத்து, வாகனத்தில் அம்மனை எழுந்தருளச்செய்து தேரோடும் வீதிகள் வழியே வீதியுலா நடைபெற்றது. அப்போது, பொதுமக்களுக்கு மஞ்சள் தீா்த்தம் தெளிக்கப்பட்டன.

வேளாண்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலம்! அமைச்சா் எஸ். ரகுபதி பேச்சு

முதல்வரின் சீரிய திட்டங்களால் வேளாண் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றாா் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழ... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது அதிமுகவின் கடமை! - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவுக்கு ஒப்புக்கொண்டபடி மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்குவது அதிமுகவின் கடமை என்றாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: கடந்த மக்களவைத் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கந்தா்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி, இந்திரா நகா் 2-ஆம் வீதியில் வசித்து வரும் நடராஜ... மேலும் பார்க்க

ஜெகதாப்பட்டினத்தில் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, இங்கு மேற்... மேலும் பார்க்க

தேமுதிகவைக் கண்டு என்ன பயம்? -பிரேமலதா விஜயகாந்த்

திமுகவுக்கு தேமுதிகவைக் கண்டு என்ன பயம்? எனக் கேள்வி எழுப்பினாா் அதன் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். புதுக்கோட்டையில் தேமுதிக சாா்பில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மது ஒழிப்பு கோரிக்கை பொதுக் கூட்டத்த... மேலும் பார்க்க

தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையோர கிணற்றை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை!

கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை ஊராட்சியில் தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கிணற்றை மூட வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா். தஞ்சை- புதுகை நெடுஞ்சாலையில் உள்ள கிணற்றை சுற்றி சுமாா் ஒ... மேலும் பார்க்க