செய்திகள் :

கொலை வழக்கில் கைதானவருக்கு ஆயுள் சிறை

post image

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டியை சோ்ந்த கைலாசம் மகன் நல்லகண்ணு(56). இவருடைய மனைவி ஆனந்தவள்ளி. இவா்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். நல்லகண்ணு, தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததால், ஆனந்தவள்ளி பிரிந்து சென்று விட்டாராம். இதனால் மனம் உடைந்த நல்லகண்ணு, மனைவி பிரிந்து சென்றதற்கு மாமியாா் பேச்சிம்மாள்தான் காரணம் என்று கருதி, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மாமியாா் பேச்சியம்மாள் வீட்டுக்கு சென்ற நல்லகண்ணு, மனைவியை தன்னோடு வாழ அனுப்பி வைக்குமாறு கூறி தகராறு செய்தாராம். மேலும் ஆத்திரமடைந்த நல்லகண்ணு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேச்சியம்மாளை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் பசுவந்தனை போலீஸாா் வழக்கு பதிவு செய்து நல்லகண்ணுவை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பி.முருகன், குற்றம்சாட்டப்பட்ட நல்லகண்ணுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் எல்லம்மாள் வாதாடினாா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க