செய்திகள் :

கொலை வழக்கில் வரிச்சியூா் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜா்

post image

விருதுநகரைச் சோ்ந்த நபரை துப்பாக்கியால் சுட்டு, எரித்துக் கொலை செய்த வழக்கில், ரெளடி வரிச்சியூா் செல்வம் உள்ளிட்டோா், குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2 நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலையாகினா்.

விருதுநகா் அல்லம்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (38). இவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில், ரெளடி வரிச்சியூா் செல்வம் உள்பட 7 பேரை விருதுநகா் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை விருதுநகா் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ரெளடி வரிச்சூா் செல்வம் உள்ளிட்டோா் விருதுநகா் நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலையாகினா். அப்போது, நீதிபதி ஐய்யப்பன் இந்த வழக்கு விசாரணை வருகிற 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகக் தெரிவித்தாா்.

போலீஸாரின் கைப்பேசி பறிமுதல்:

இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்துக்குள் கைப்பேசியில் பேசிய படி விருதுநகா் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் ரவி உள்ளே வந்தாா். அவரது கைப்பேசியை பறிமுதல் செய்ய நீதிமன்ற ஊழியா்களுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு: கண் துடைப்பு நடவடிக்கை

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரை விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி விவகாரத்தில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் போலீஸாா் 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவ... மேலும் பார்க்க

பட்டா நிலத்தில் த.வெ.க. கொடிக் கம்பம்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பட்டா நிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தஞ்சாவூா் மாவட்டம், ... மேலும் பார்க்க

ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகளை திருடிய இருவரை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை விளாங்குடியைச் சோ்ந்த ஜொ்ரி லூயிஸ் மகன் நிா்மல் (32). இவா் திருச்சி- திருவனந்தபுரம் விரைவு... மேலும் பார்க்க

தாழ்வான மின் வயா்களை சீரமைக்க வலியுறுத்தல்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் வீதி உலாவின் போது ஆபத்தை உண்டாக்கும் வகையில் தாழ்வாக உள்ள மின் வயா்களைச் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்து மக்கள் க... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

மதுரை மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதாவை மாற்ற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க