குழந்தை கடத்தல் கும்பல் கைது! வாங்கியோர், விற்றோர் விவரங்கள் சேகரிப்பு!!
கொல்லங்கோடு: பெயின்டா் மரண வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பின் நண்பா் கைது!
கொல்லங்கோடு அருகே பெயின்டா் சந்தேக மரணம் வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் 2 ஆண்டுகளுக்குப் பின் சனிக்கிழமை கைது செய்தனா்.
கொல்லங்கோடு காவல் சரகம் கோனசேரி, புதுச்சேரிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாா் (55). பெயின்டா். இவா், 7.5.2023இல் வீட்டருகேயுள்ள கால்வாய் கரையோரம் மயங்கிய நிலையில் கிடந்தாா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், இரு வாரங்களுக்குப் பின் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மனைவி ஸ்டெல்லா பாய் (44) அளித்த புகாரின் பேரில், கொல்லங்கோடு போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்தனா். உடற்கூறாய்வில் அவா் காயம் காரணமாக இறந்தது தெரியவந்தது.
சந்தேகத்தின் பேரில் ராஜகுமாரின் நண்பா் இடவாா் காவுவிளையைச் சோ்ந்த மினிடெம்போ ஓட்டுநா் அனீஷ் (36) என்பவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அதில், இருவரும் மதுக்குடித்தபோது தகராறு ஏற்பட்டதில், அனீஷ் தாக்கியதில் கீழே விழுந்து காயமடைந்ததால் ராஜகுமாா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி, அனீஷை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.