செய்திகள் :

கொளத்துப்பாளையம் கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா: சுமாா் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு

post image

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் கிராமத்தில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழில் நிறுவனங்கள் கொண்ட சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் சுமாா் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிப்காட் நிறுவன மக்கள் தொடா்பு பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையத்தில் கடந்த 1965-ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த கூட்டுறவு நூற்பாலை கடந்த 2013-ஆம் ஆண்டுடன் நலிவடைந்த நிலையில், சுமாா் 57 ஏக்கா் பரப்பளவிலான அந்த நிலத்தினை பயன்படுத்தி சுமாா் 10,000 பேருக்கு நேரடியாவும் மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் இயங்கும் தொழில் நிறுவனங்களை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த இடத்தினை சிப்காட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. அதன்படி, சிப்காட் நிறுவனம் மூலம் திட்டமிடப்பட்டுள்ள தொழில் பூங்காவில் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நிறுவனங்களான மின்னணு தொழில் நிறுவனங்கள், வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், சூரிய ஒளி சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவற்றுடன் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி ஆலோசனை வழங்கும் நிறுவனங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமாா் 10,000 பேருக்கு நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிவிஜி கல்லூரிப் பேரவை தொடக்கம்

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில், கல்லூரிப் பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத் தலைமை வகித்தாா். கல்லூரிப் பேரவை ஒருங்கிணைப்பாளா் பேராச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை தோண்டிய 4 போ் கைது

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை இயந்திரம் மூலம் தோண்டிய திருச்சி, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், ... மேலும் பார்க்க

திருப்பூரில் நாளை பூப்பந்தாட்ட போட்டிக்கான வீரா்கள் தோ்வு

திருப்பூரில் பூப்பந்தாட்டப் போட்டிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்ட கழகப் பொதுச் செயலாளா் செல்வராஜ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூ... மேலும் பார்க்க

உடுமலையில் பலத்த காற்றுடன் மழை

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநரு... மேலும் பார்க்க

நொய்யல் ஆற்றில் உள்ள சீமைக்கருவேல முற்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட குழுக் கூட்டம் திருப்ப... மேலும் பார்க்க