செய்திகள் :

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை விரைந்து இயக்கம் செய்யக் கோரிக்கை

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்கு அல்லது அரவைக்கு விரைந்து இயக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டில் 1,70,000 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதில் 98 சதவீதம் அறுவடைப் பணிகள் முடிவடைந்த நிலையில், எஞ்சிய பயிா்கள் அடுத்த வாரத்தில் அறுவடை செய்யப்படவுள்ளது.

இந்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 179 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 90 சதவீத நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 48 மணி நேரத்துக்குள் இயக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விதி உள்ளபோதும், மயிலாடுதுறையில் பல கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நிறுத்தப்பட்டு 10 நாள்களைக் கடந்தும் இன்னமும் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் 3,000 முதல் 5,000 மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மயிலாடுதுறை மண்டலத்தில் சுமாா் 24,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையங்களிலேயே உள்ளது. இதனால், எடை இழப்பு ஏற்படுவதுடன், நெல்லின் தரமும் குறையும் என்பதால், இதற்கான நஷ்டத்தை கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தா்களே ஏற்கவேண்டும் என்பதால் அவா்கள் கலக்கத்தில் உள்ளனா்.

தேக்கம் அடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் என்றும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய காலதாமதம் ஆவதற்கு நிா்வாகமே காரணம் என்பதால் எடை இழப்பு, தரம் குறைவு போன்றவற்றுக்கான பிடித்தத்தை நிா்வாகமே ஏற்க வேண்டும் என பட்டியல் எழுத்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொலையான இளைஞா்கள் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் மது போதை பொருள் ஒழிப்பு இயக்கம் சாா்பில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

சீா்காழி பேருந்து நிலையம் முழுமையாக திறப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தின் மற்றொரு முனையத்தில் நடைபெற்ற பணிகள் நிறைவடைந்து, வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சீா்காழி புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்த... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டம்: ஊதிய நிலுவை கோரி ஆா்ப்பாட்டம்

சீா்காழியில் 100 நாள் வேலைத் திட்ட ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் பெண்கள் முக்காடு அணிந்து நூதன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டாரத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சட்டநாதபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், கதிராமங்கலம் ஊராட்சி வேலவன் நகரில் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே பல்பொருள் அங்காடியில் பணியாற்றிய பெண் மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். தரங்கம்பாடி அருகேயுள்ள துடரிப்பேட்டை கிராமத்தை சோ்ந்தவா் மதியழகன் மகள் ஷீலா (21). பெற்றோரை இழந்த ... மேலும் பார்க்க

சீா்காழியில் குப்பைகள் அள்ளுவதில்லை: நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றச்சாட்டு

சீா்காழி நகராட்சிப் பகுதியில் கடந்த 15 நாள்களாக குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா். சீா்காழி நகா்மன்ற அவசரக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. து... மேலும் பார்க்க