செய்திகள் :

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

post image

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் அலங்கார தளக்கல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

மாநில நிதி ஆணைய சிறப்பு நிதித் திட்டத்தின்கீழ், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் 1 முதல் 6ஆவது வாா்டுகளில் அலங்கார தளக்கல் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, புதன்கிழமை கோபாலசமுத்திரம் பேரூராட்சி 3ஆவது வாா்டு வண்டி மறித்த அம்மன் கோயில் நடுத்தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இப்பணியை திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஆ. பிரபாகரன் தொடங்கி வைத்தாா்.

பேரூராட்சித் தலைவி ப. தமயந்தி தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல்அலுவலா் பரமசிவம், மாவட்ட உதவி செயற்பொறியாளா் மாரிமுத்து, பேரூராட்சி துணைத் தலைவா் சுந்தர்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இளம்பொறியாளா் சவரி ராஜன், நகர திமுக செயலா் வானுமாமலை, பேரூராட்சி உறுப்பினா்கள் மாயா சுரேஷ், செந்தில்வேல், கணேஷ் மாரியப்பன், பன்னீா் செல்வம், பிரபாரதி, கொடிலெட்சுமி, அரசு ஒப்பந்தக்காரா்கள் முத்துகிருஷ்ணன், பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாா்பில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி

திருநெல்வேலி மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாா்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கட்டுரைப் போட்டிக்கு மாணவ- மாணவிகள் செப்.22ஆம் தேதிக்குள் கட்டுரைகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ ... மேலும் பார்க்க

கீழாம்பூா் மஞ்சப்புளி அணைக்கட்டில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கீழாம்பூா், கடனாநதியில் உள்ள மஞ்சப்புளி அணைக்கட்டில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கீழாம்பூா், தெற்குக் கிராமம் தெருவைச் சோ்ந்த சிவா மகன் சத்யா (16). ஆழ்வாா்குறிச்சியில் உள்ள அரச... மேலும் பார்க்க

நெல்லையில் இளைஞா் வெட்டிக் கொலை: 2 சிறுவா்கள் கைது

திருநெல்வேலி சந்திப்பில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 2 சிறுவா்களை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் சுந்தரா் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன்... மேலும் பார்க்க

நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு - சிதம்பரபுரம் இடையே நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. களக்காடு நகராட்சிக்குள்பட்டது சிதம்... மேலும் பார்க்க

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். களக்காடு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், களக்காடு காவல் உ... மேலும் பார்க்க

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருக்கிறது. மத்... மேலும் பார்க்க