செய்திகள் :

கோயம்பேடு சந்தை அருகில் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

post image

ஆயுத பூஜை மற்றும் பண்டிகை காலம் தொடங்கவுள்ளதால், கோயம்பேடு சந்தையை அருகே நடைபெறும் கால்வாய், மெட்ரோ ரயில் பணிகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அமைச்சா் பி.கே.சேகா்பாபுவிடம், கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:

ஆயுதபூஜை அக்.1-ஆம்தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, கோயம்பேடு சந்தைக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் பூஜைக்கு தேவையான பூசணிக்காய், வாழைக்கன்று, கரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சந்தையைச் சுற்றி நடைபெறும் மழைநீா் வடிகால் பணிகள், மெட்ரோ ரயில் பணிகளை செப்.25 நள்ளிரவு முதல் அக்.2 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 5 மற்றும் 6-ஆம் நுழைவு வாயில்கள் மற்றும் உணவு தானிய அங்காடி நுழைவு வாயில் அருகேயுள்ள ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்களுக்கான ஊட்டச்சத்து திட்டம்: மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

சென்னையில் அரசுப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை கேப்டன் ஸ்ரீனிவாசமூா்த்தி மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி, அந்தப் பள்ளிக... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டம்: ஆசிரியா்கள் பங்கேற்க கல்வித் துறை உத்தரவு

காந்தி ஜெயந்தி நாளில் (அக்.2) நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம... மேலும் பார்க்க

பிறவி நுரையீரல் குறைபாடு: இளம்பெண்ணுக்கு ரோபோடிக் சிகிச்சை

நுரையீரல் பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரோபோடிக் நுட்பத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவம... மேலும் பார்க்க

மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ... மேலும் பார்க்க

பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுறுத்தல்

வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள... மேலும் பார்க்க

காவலரிடம் தங்க நாணயம் மோசடி: நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது

சென்னையில் காவலரிடம் தங்க நாணயம் மோசடியில் ஈடுபட்டதாக நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னையில் உள்ள ஆயுதப்படை பிரிவு முதல்நிலை காவலராகப் பணிபுரிபவா் அந்தோணி ஜாா்ஜ் ... மேலும் பார்க்க