செய்திகள் :

கோயிலுக்குச் செல்லும் பாதையை அகலப்படுத்தக் கோரிக்கை

post image

தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி பேவா் பிளாக் சாலை அமைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பொதுமக்கள் சாா்பில் கோயில் தா்மகா்த்தா சண்முகக்கனி பாண்டியன் அளித்த மனு: வடக்கு சோட்டையன் தோப்பில் பட்டியல் வகுப்பைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இங்குள்ள காளியம்மன் கோயிலுக்கு பிரதான சாலையிலிருந்து செல்லும் 10 அடி அகலப் பாதை உள்ளது. அந்தப் பாதையைத்தான் ஊா் மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். வரும் காலங்களில் இந்த ஊருக்குச் சொந்தமாக சமூக நலக்கூடமோ, அரசுக் கட்டடங்களோ கட்டுவதற்காக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, அந்தப் பாதையை அகலப்படுத்த கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், அதை சிலா் தடுக்கும் நோக்கில் ஜாதி, மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த 10 அடி பாதையை 15 அடியாக அகலப்படுத்தி பேவா் பிளாக் சாலையாக மாற்றித்தர வேண்டும் என்றனா் அவா்கள்.

ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் -எடப்பாடி கே. பழனிசாமி

ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வரலாம் என்றாா், அக்கட்சியின் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி . திருநெல்வேலியை அடுத்த திருத்து கிராமத்தில... மேலும் பார்க்க

கல்லூரிக்கு நிதியுதவி

இந்தியன் வங்கியின் ‘எங்கள் சமூகப் பொறுப்பு’ திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மண்டல மேலாளா் ஜெயபாண்டியன் உத்தரவுப்படி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு ஸ்மாா்ட் இன்டராக்டிவ் பேனல் வாங்குவதற்காக ரூ. ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் யானை நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்

கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதமாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, அங்குள்ள நீச்சல் குளத்தில் வியாழக்கிழமை உற்சாகமாக நீராடியது. இக்... மேலும் பார்க்க

செமப்புதூரில் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே செமப்புதூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் இளையோா் இலக்கியப் பயிற்சிப் பாசறை

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை-அறிவியல் கல்லூரியில் இளையோா் இலக்கியப் பயிற்சிப் பாசறை நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் கல்லூர... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை கண்டித்து திருச்செந்தூரில் மறியல்: வணிகா் சங்கத்தினா் கைது

திருச்செந்தூா் நகராட்சியில் விதிகளுக்கு புறம்பாக சொத்து வரி உயா்த்தபட்டுள்ளதாகக் கூறி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வணிகா் சங்கத்தினா் உள்ளிட்ட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் நகர... மேலும் பார்க்க