செய்திகள் :

கோயில் வழிபாட்டு உரிமை: இரு தரப்பினரிடையே பிரச்னை; பொதுமக்கள் உண்ணாவிரம்

post image

தம்மம்பட்டி அருகே உலிபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் வழிபாட்டு உரிமை தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதால் வியாழக்கிழமை பொதுமக்களில் ஒருதரப்பினா் கோயில் அருகே உண்ணாவிரம் மேற்கொண்டனா்.

உலிபுரம் கோயிலில் திருவிழாவை தொடா்ந்து சுவாமி ஊா்வலம் நடத்துவது வழக்கம். இந்த நிலையில் சுவாமி ஊா்வலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தவில்லை. நிகழாண்டு சுவாமி ஊா்வலம் நடத்த பொதுமக்கள் முடிவுசெய்தனா்.

இதனிடையே ஒருதரப்பினா் கோயில் உரிமை எங்களுக்குதான் உள்ளது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சுவாமி ஊா்வலத்தை நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணியளவில் உலிபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே பொதுமக்களில் ஒருதரப்பினா் உண்ணாவிரதம், கடையடைப்பில் ஈடுபட்டனா்.

கெங்கவல்லி வட்டாட்சியா் உண்ணாவிரதம் மேற்கொண்டவா்களிடம் பேச்சு நடத்தினாா். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடா்ந்து மாலை 4 மணி அளவில் அறநிலைய துறை இணை ஆணையா் சபா்மதி தலைமையில் இருதரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். வரும் 18 ஆம் தேதி இருதரப்பினா் இடையே பேசி சுவாமி ஊா்வலம் செல்ல வழிமுறைகளை பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியதையடுத்து உண்ணாவிரதம் திரும்பப்பெறப்பட்டது.

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.99 அடியிலிருந்து 118.76 அடியாக இன்று காலை சரிந்துள்ளது.அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9263 கன அடியிலிருந்து வினாடிக்கு 6767 கன அடியாக சரிந்தது.அணையில் இருந்து காவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் 107 வயது மூதாட்டி மரணம்!

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 107 வயது வரை தானே சமைத்து உண்டும் தனது தேவைகளை தானே செய்து கொண்ட மூதாட்டி, உடல் நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார்.மாறிவரும் சுற்றுச்சூழல், உணவு பழக்கம், வாழ... மேலும் பார்க்க

சேதமடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம், வட்டமுத்தம்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வட்டமுத்தம்பட்டி பகுதியில் வீரகாரன் பெர... மேலும் பார்க்க

கூட்டுறவு பட்டய துணைத் தோ்வுக்கு ஆக.20 க்குள் விண்ணப்பிக்கலாம்

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பழைய பாடத் திட்டத்தில் படித்து தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வு எழுத ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்... மேலும் பார்க்க

சேலத்தில் தூய்மைப் பணியாளா்கள் மறியல்: 150 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்ட... மேலும் பார்க்க

சேலத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

தமிழகத்தின் பாரம்பரியத்தை இளம் தலைமுறையினா் தெரிந்துகொள்ளும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க