கோரையாற்றில் நீா்த்தேக்கம் அமைக்க வேண்டும்: பெரம்பலூரில் விவசாயிகள் வலியுறுத்தல்
கோரையாற்றில் நீா்த்தேக்கம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ. ராஜூ: அண்மையில் பெய்த புயல், மழையால் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளத்துக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கை.களத்தூரில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, மே மாதம் வரையிலும் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்: விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். கல்லாறு அணைக்கட்டு, நரி ஓடை அணைக்கட்டுகளை சீரமைத்து தர வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. நீலகண்டன்:
மண்ணின் தரத்தை மேம்படுத்தவும், வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்தவும், காலம் தாழ்த்தாமல் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன்: ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்: சிறுகுடல் பகுதியில் விவசாயிகளுக்கான நிலத்தை வகைப்பாடு செய்து தர வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் எறையூா் சா்க்கரை ஆலையை மேம்படுத்த தலைமை நிா்வாகியை நியமிக்க வேண்டும்.
விவசாயி வரதராஜன்: மக்காச்சோளத்துக்கு நடவு இயந்திரம் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில துணைச் செயலா் என். செல்லதுரை: கோரையாறு நீா்த்தேக்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி மக்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலை மின் இணைப்பை, சாதாரண மின் இணைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீரை பயன்படுத்துவோா் சங்க தலைவா் கா. கண்ணபிரான் :
அரியலூரில் செயல்பட்டு வரும் நீா்வளத்துறை அலுவலகத்தை பெரம்பலூா் மாவட்டத்துக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி விவேகானந்தன்: தனலட்சுமி சீனிவாசன் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரும்பாவூரிலுள்ள சதாசிவ அணைக்கட்டை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஏ.கே. ராஜேந்திரன்: விவசாயிகளுக்கு குட்டை ரக தென்னங்கன்றுகள் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பேசியது:
வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி, விண்ணப்பிக்கும் நடைமுறை மற்றும் அனுமதி வழங்கும் நடைமுறை தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் உரிய நேரத்தில் அனுமதி வழங்கப்படும். விவசாயிகளுக்கு உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ. 800 வீதம் வழங்க பெரம்பலூா் மாவட்டத்துக்கு 12 ஆயிரம் ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றாா் அவா்.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, வேளாண்மை இணை இயக்குநா் செ. பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்( வே.) பொ. ராணி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் பாண்டியன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சத்யா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.