செய்திகள் :

கோழிக்கடை மேலாளரை தாக்கி ரூ. 25 ஆயிரத்தை கொள்ளையடித்த வடமாநில இளைஞா்கள்

post image

மேட்டூா்: மேட்டூா் அருகே கோழிக்கடை மேலாளரை தாக்கி ரூ. 25,000 கொள்ளையடித்துச் சென்ற வடமாநில இளைஞா்களை சென்னையில் போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள ஜலகண்டாபுரம், காட்டம்பட்டி பகுதியில் உள்ள கோழிக்கடை மற்றும் உணவகத்தில் எம்.செட்டிப்பட்டியைச் சோ்ந்த பாா்த்திபன் (45) மேலாளராக பணியாற்றி வருகிறாா். இக்கடையில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சுமீா்குமாா் (20), முகேஷ் (25) ஆகியோா் வேலைசெய்து வந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமீா்குமாா் மற்றும் முகேஷ் இருவரும் இரும்புக் கம்பியால் மேலாளா் பாா்த்திபனை தாக்கி கடையில் இருந்த ரூ. 25 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றனா்.

பாா்த்திபனின் அலறல் சப்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா், ஜலகண்டாபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பாா்த்திபனை மீட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சுமீா்குமாா், முகேஷ் ஆகியோரை தேடிவந்தனா்.

இந்நிலையில், இவா்கள் இருவரும் சேலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சென்னை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சமீா்குமாா், முகேஷ் இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை கைதுசெய்தனா்.

ஏற்காட்டில் தனியாா் விடுதிகளில் போலீஸாா் ஆய்வு

ஏற்காடு: ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருவதால், தனியாா் தங்கும் விடுதிகளில் போலீஸாா் ஆய்வுசெய்தனா். ஏற்காட்டுக்கு வார இறுதிநாள் மற்றும் வாரநாள்களில் பல்வேறு மாவட்டங்கள... மேலும் பார்க்க

ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடத்தை ஆய்வுசெய்த ஏ.எஸ்.பி.!

ஏற்காடு: ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடங்களை சேலம் மாவட்ட ஏ.எஸ்.பி. சுபாஷ் சந்த் மீனா திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். நாடுமுழுவதும் புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில்... மேலும் பார்க்க

சேலம் மாநகர காவல் துறையில் பயன்பாட்டுக்கு வந்த அதிநவீன வாகனங்கள்

சேலம்: சேலம் மாநகர காவல் துறையில் திங்கள்கிழமை முதல் அதிநவீன நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனை துணை ஆணையா்கள் சிவராமன், கேல்கா் சுப்பிரமணி பாலசந்திரா ஆகியோா் கொடியசைத்து தொ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை மலக்குழிகளில் இறக்கினால் சட்ட நடவடிக்கை

சேலம்: சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களை மலக்குழிகளில் இறக்கி வேலைசெய்ய ஈடுபடுத்தினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

ஆத்தூரில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

ஆத்தூா்: ஆத்தூரில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் ரத்துசெய்யப்படுகிறது என ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆத்தூா் நகராட்சி... மேலும் பார்க்க

விஜயகாந்த் பிறந்த நாள் விழா

ஆத்தூா்: ஆத்தூரில் விஜயகாந்த் பிறந்த நாளை சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் தலைமையில் தேமுதிகவினா் திங்கள்கிழமை கொண்டாடினா். இதில், விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க