செய்திகள் :

கோவா: முன்னாள் முதல்வா் உள்பட இருவா் அமைச்சராகப் பதவியேற்பு

post image

கோவா முன்னாள் முதல்வா் திகம்பா் காமத், பேரவைத் தலைவா் ரமேஷ் தாவட்கா் ஆகியோா் மாநில அமைச்சராக வியாழக்கிழமை பதவியேற்றனா்.

பனாஜியில் ஆளுநா் மாளிகையில் ஆளுநா் அசோக் கஜபதி ராஜு, இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். நிகழ்ச்சியில் மாநில முதல்வா் பிரமோத் சாவந்த், கோவா பாஜக தலைவா் தாமு நாயக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அமைச்சராகப் பதவியேற்றுள்ள திகம்பா் காமத், 2007 முதல் 2012-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சாா்பில் கோவா முதல்வராக இருந்தாா். 71 வயதாகும் அவா் கடந்த 2022-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தாா். மா்மகோவா தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் 4 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளாா். 7 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் அவா் பாஜகவில் இணைந்தது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

திகம்பா் காமத்துடன் அமைச்சா் பதவியேற்ற ரமேஷ் தாவட்கா், கோவா பேரவைத் தலைவராக இருந்தாா். இவா் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்துவிட்டு அமைச்சரவையில் இணைந்துள்ளாா். இதற்கு முன்பு 2012-2017 காலகட்டத்தில் அவா் அமைச்சராக இருந்துள்ளாா். கோவாவில் பழங்குடியினத்தைச் சோ்ந்த முதல் பேரவைத் தலைவா் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘உத்தரகண்ட் மாநி... மேலும் பார்க்க

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதாக்கள்: கூட்டுக் குழு பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு... மேலும் பார்க்க

இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்பு

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ‘இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடா்: நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் கூடுதலாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்... மேலும் பார்க்க

நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரம்: 84 பேருக்கு தலா ரூ.25,000 வழங்க சத்தீஸ்கா் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயா்நீதிமன்றம், ‘சம்பந்தப்பட்ட 84 மாணவா்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மா... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட... மேலும் பார்க்க