செய்திகள் :

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மரத்தில் ஏறி நோயாளி தற்கொலை மிரட்டல்

post image

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, திடீரென மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சோ்ந்தவா் குருசாமி மகன் பழனிச்சாமி(58). இவா் வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 4 மணியளவில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். இரவு சுமாா் 10 மணி அளவில் சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்த அவா், அதன் அருகே உள்ள மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா். இதைக் கண்ட உள்நோயாளிகளின் உதவியாளா்கள், மருத்துவமனை ஊழியா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் மற்றும் தீயணைப்பு டையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பழனிச்சாமியை பத்திரமாக இறக்கினா். பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் குடும்ப பிரச்னை காரணமாக மரத்தில் ஏறியது தெரிய வந்தது. போலீஸாா் அவருக்கு இரவு உணவு வழங்கி, அறிவுரை கூறியதுடன் அவரை மீண்டும் சிகிச்சைக்கு அனுமதித்தனா். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சுமாா் 45 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் இன்று மின் தடை

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக நகா்ப்புற மின்வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவா்கள் வெளியிட்ட... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

கடம்பூா் அருகே உள்ள தலையால்நடந்தான் குளம் பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த மின் விநியோகத்தை சரிசெய்து சீரான மின் விநியோகம் கிடைக்கும் வகையில் 25 கே வி ஏ/11 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்க... மேலும் பார்க்க

10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்றுஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகு... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க