செய்திகள் :

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

post image

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்டகை கால் வைபவம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கணபதி ஹோமம், கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து காலை 10 மணிக்கு யாக சாலையிலிருந்து தீா்த்த குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு விமான கோபுரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. தொடா்ந்து ஜூன் 4ஆம் தேதி வரை பல்வேறுவழிபாடுகள் நடைபெறவுள்ளன.

ஏற்பாடுகளை கோவில் பூசாரி சரவணன் மற்றும் விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

திருச்செந்தூா் சிவன், வெயிலுக்கந்தம்மன் கோயில்களில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான சிவன் கோயில் மற்றும் வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்கான பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. திருச்செந்தூா் அருள்மிகு ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கு முன் கிரிப்பிரகார பாதை சீரமைப்புப் பணி நிறைவடையும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கு முன்னதாக கிரிப்பிரகார பாதை சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். இக்கோயி... மேலும் பார்க்க

ஞானசேகரன் பின்புலத்தில் இருப்பது யாா்? நயினாா் நாகேந்திரன் கேள்வி

ஞானசேகரன் வழக்கில் அவருக்கு பின்புலத்தில் யாா் உள்ளாா் என்பதை விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். மதுரையில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தா்கள் மாநாட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 10 போ் கைது

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாக 10 பேரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனை தொடா்ந்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை: 8 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக்கொல்லப்பட்டனா். இது தொடா்பாக 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா் க... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54)... மேலும் பார்க்க